Showing posts with label கோட்டை. Show all posts
Showing posts with label கோட்டை. Show all posts

Wednesday, March 12, 2014

பயணம் - தலச்சேரி கோட்டை (Thalassery Fort ), கண்ணூர், கேரளா

ரொம்ப நாள் முன்னாடி கேரளாவின் தலச்சேரிக்கு போயிருந்த போது பக்கத்துல சுத்திப்பார்க்க என்ன இருக்குன்னு கேரள சேட்டன்கிட்டே ச்சோதிக்கவும், கொறச்ச தூரத்துல ஃபோர்ட் ஒண்ணு உண்டு என்று பறைய, உடனடியாக ஆட்டோ தேடி ஏறி அமர்ந்தோம்..ஐந்து நிமிட பயணத்தில் கோட்டையை வந்தடைந்தோம்.


வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான கோட்டை மிக அமைதியாக ஆளரவமற்று இருக்கிறது.அந்த காலை நேரத்தில் சூரியனின் சுட்டெரிக்கும் கதிர்கள் கூட பலமின்றி இருக்க, அந்த பலம் வாய்ந்த பிரம்மாண்டமான கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்தோம்.மிக விசாலமான இடத்தில் கோட்டை அமைந்திருக்கிறது.இருபுறம் கொண்ட மாடிப்படிகள் மூலம் ஏறி கோட்டையின் சிறிய நுழைவாயில் அடைந்தோம்.உள் நுழைந்த்தும் மிக விசாலமான இடத்தில் பரந்து விரிந்து இருக்கிறது.நாற்புரமும் கோட்டையின் அரண் போன்ற சுவர்கள் பாதுகாப்பாய் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கிறது.கேரளாவின் இயற்கை செங்கற்களான பாறைக்கல்லில் கோட்டையின் அனைத்து சுவர்களும் எழுப்பப்பட்டிருக்கின்றன.கோட்டையின் சுற்றுச்சுவரில் கண்காணிப்பு கோபுரங்கள், பீரங்கி வைக்கும் இடங்கள் என மிக பாதுகாப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.சிறைச்சாலைகள் கூட இருக்கின்றன.ஒரு சுரங்கப்பாதையும் கோட்டையின் உள்ளே அமைக்கப்பட்டிருக்கிறது.







      கோட்டையின் மீது ஏறிப்பார்க்கும் போதுதான் இக்கோட்டை அரபிக்கடலின் ஓரத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிகிறது.அங்கிருந்து பார்க்கும் போது அரபிக்கடலின் அழகான தோற்றம் நம்மை வியக்கவைக்கிறது.
இந்த கோட்டையினுள் வரலாறு, புகைப்படங்கள் மற்றும் அரிய பொருட்கள் பார்வையாளர்களுக்காக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.இந்த கோட்டை தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்படும் தேசிய நினைவுச் சின்னங்களில் ஒன்று.
         இந்தக்கோட்டையானது 1708ல் ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டு இருக்கிறது.இதைப்பத்தி இன்னும் விரிவா தெரிஞ்சிக்கனும்னா விக்கிபீடியா பார்த்துங்க...

கண்ணூர் தலச்சேரி பக்கம் போனீங்கன்னா ஒரு எட்டு பார்த்துட்டு வந்திருங்க...
காலை 8 மணிமுதல் மாலை 6 மணி வரைக்கும் திறந்திருக்கும்.

நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, July 23, 2012

ஆலம்பரா கோட்டை - கடப்பாக்கம் (Alambara Fort )


ஆலம்பரா கோட்டை...
ஈசிஆர் ரோட்டில் முதலியார் குப்பம் படகு இல்லம் சென்று விட்டு அடுத்து எங்காவது பீச்சுக்கு செல்லலாம் என்று முடிவெடுத்து போனது கடப்பாக்கம் என்கிற ஒரு சின்ன கடற்கரை கிராமத்திற்கு..சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமை அடையாமல் இருக்கிறது இந்த ஊர்.சென்னையில் இருந்து பாண்டி செல்லும் ஈசிஆர் ரோட்டில் இருந்து இடது பக்கம் திரும்பினால் மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் கடற்கரையை அடையலாம்.
கடற்கரை வரை சென்று இறங்கியவுடன் நம்மை வரவேற்பது மீன் கவிச்சியும், காய வைத்துள்ள மீன் கருவாடும்... அப்புறம் நல்ல கடல் காற்றும்.


ஆட்களின் நடமாட்டம் அதிகம் இல்லாமல் நன்றாக அமைதியாக இருக்கிறது இந்த கடலோர பகுதி.மீனவர்களின் கட்டுமரங்கள் நிறைய இருக்கின்றன. காய்ந்து போன மீன்களின் முள் கூடுகள் நிறைய கிடக்கின்றன.கொஞ்சநேரம் பீச் மணலில் நடந்து விட்டு பார்க்கையில் ஒரு சிதிலமடைந்த கோட்டை நம் கண்ணுக்கு புலப்பட என்னவென்று கேட்க ஆலம்பரா கோட்டை என்றும் திப்பு சுல்தான் கோட்டை என்றும் சொன்னனர்.நடந்து செல்ல லேட்டாகும் என்பதால் வண்டியில் கோட்டைக்கு கிளம்பினோம்.கிராமத்தின் ஊடே செல்கிற ரோட்டில் சென்றோம்.நிறைய வீடுகள் சுனாமியால் பாதிக்கப்பட்டு இன்னும் அப்படியே இருக்கின்றன.
ஆலம்பரா கோட்டை ரொம்ப சிதிலமடைந்து காணப்படுகிறது என்பதை உணர்த்தும் விதமாகவே இக்கோட்டையின் பெயர் தாங்கிய போர்டும் மிக மோசமான நிலையில் இருக்கிறது.கோட்டையை அடைந்தோம். பேக் வாட்டரில் உள்ளபடி பாதி மணலில் புதைந்தபடி இதன் சுவர்கள் இருக்கின்றன.கோட்டை சுவர் இன்னும் பலம் மிக்க தாகவே இருக்கிறது.






மிகப்பெரிய பரப்பளவில் இக்கோட்டை அமைந்து இருந்தாலும் தற்போது சிதிலமடைந்து ஆங்காங்கே மண்ணில் புதைந்து இருந்தாலும் இந்த கோட்டையை ஆண்ட மன்னர்களின் வரலாற்றை, அவர்களுடைய பலத்தை பறை சாற்றுகிறது.இந்த கோட்டைக்கு நடுவில் ஒரு சமாதி இருக்கிறது.இது யாருடையது என்பதற்கான விவரம் தெரியவில்லை.ஆனால் இங்கு அதிகம் நடைபெறும் சினிமா மற்றும் சீரியல் படப்பிடிப்புகளின் பெயர்களை மட்டும் தெரிந்து வைத்து இருக்கிறார்கள் இங்குள்ள வாசிகள்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் கொஞ்ச நேரம் இளைப்பாறிவிட்டு திரும்பினோம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Wednesday, December 7, 2011

நாமக்கல் கோட்டையின் தோற்றம்

நாமக்கல்லில் ஒரு ஞாயிறு (4.12.11) காலை ....
மீன் வாங்க சந்தைக்கு சென்ற போது நாமக்கல் கோட்டையின் தோற்றம்



 சந்தையில் அணிவகுத்த மீன்கள்



இன்னும் கொஞ்சம்...

Friday, July 8, 2011

மலைக்கோட்டை - திருச்சி

நம்ம விஷால் நடிச்ச படத்தோட விமர்சனம், இந்த படம் எப்போவோ ரிலீஸ் ஆச்சே..இப்போ போய் பதிவா அப்படின்னு நினைச்சி விடாதீங்க ..திருச்சி யில் உள்ள மலைக்கோட்டை...எப்பவும் பரபர காணப்படும் பர்மா பஜார் இங்குதான் உள்ளது.பெண்கள் குறிப்பா கல்லூரி மங்கைகளின் வேடந்தாங்கலாக இந்த பர்மா பஜார் இருக்கிறது.அவர்களுக்கு தேவையான வளையல் , தோடு , ஹேர் கிளிப் இது மாதிரி லேட்டஸ்ட் பொருட்கள் அனைத்தும் குவிந்து கிடக்கின்றன.(சும்மா கிடைக்காது ..விலைக்குத்தான் )அலைமோதும் கூட்டம், பரபரப்பான விற்பனை என களை கட்டுகிறது.அப்புறம் இந்தியாவிலேயே மிக பெரிய ஜவுளி மாளிகை என சொல்லப்படுகின்ற சாரதா சில்க்ஸ் இங்கு தான் உள்ளது.மலைகோட்டை அடிவாரத்தில் மிகவும் விஸ்தாரமாய் அமைந்துள்ளது.வெளிநாட்டு பொருட்கள் அனைத்தும் இந்த பர்மா பஜாரில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன.அருகிலேயே தெப்பக்குளம் இருக்கிறது.சத்திரம் பஸ் ஸ்டாண்ட், மற்றும் புகழ் வாய்ந்த சர்ச் ஒன்றும் உள்ளது.


இன்னும் கொஞ்சம்...