சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை
என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...
நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...
என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...
நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.
நம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....
நேசங்களுடன்
ஜீவானந்தம்








