Showing posts with label ஈரோடு. Show all posts
Showing posts with label ஈரோடு. Show all posts

Wednesday, January 8, 2014

கோவை மெஸ் - ஜூனியர் குப்பண்ணா, ஈரோடு

ஈரோட்டில் ஒரு இரவு வேளை.... பத்து மணிக்கு மேல் ஆகிக்கொண்டிருந்தது. பசி வயிற்றை பதம் பார்க்கவே எங்காவது ஹோட்டல் தட்டுப்படுமா என்று பார்வைகள் அலைமோதிக்கொண்டே வர, பார்க் செல்லும் வழியில் ஜூனியர் குப்பண்ணாவின் பச்சை போர்டு கண்களில் தட்டுப்பட்டது.ஏற்கனவே மற்றொரு பச்சை போர்டு கடையால் அதிகமாய் பசியின் தீவிரத்தில் இருந்தோம்.வியாபாரம் முடிவடையும் நேரத்தில் இயங்கிக்கொண்டிருந்த கடையில், ஆள் அரவமின்றி இருந்த கடையில் எதுவும் கிடைக்காது போல என எண்ணிக்கொண்டே அங்கிருந்த பணியாளர்களை நெருங்கி சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று கேட்க, வாங்க சார் எல்லாம் இருக்கு என சொல்லி எங்கள் வயிற்றில் பால் வார்த்தார்.சந்தோசமாய் உள்ளே நுழைந்தால் நம்மளைப் போலவே நிறைய பேர் இன்னும் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.அதில் அம்மணிகளும் அடக்கம்...




அமர்ந்த உடனே இலை வந்து சேர்ந்தது.என்ன இருக்கு என்று கேட்க, எல்லாம் ஒப்பித்த சர்வரிடம், நாங்கள் நான்கு பேரும் பிளைன் பிரியாணி, மட்டன் தலைக்கறி, கொத்துக்கறி, சிக்கன் 65, தோசை, முட்டை தோசை, கோதுமை உப்புமா என ஆளாளுக்கு ஆர்டர் பண்ண ஒவ்வொன்றாய் வந்து சேர்ந்தது.
பிளைன் பிரியாணி குஸ்கா ரகத்தில் தான் இருந்தது.மணம் குணம் சுவை எல்லாம் ஓகே....மட்டன் பீஸ் இல்லாததால் அதைப்பற்றிய குறிப்புகள் நஹி....
அடுத்து தோசை....செம சாஃப்ட்....பிய்ப்பது கூட தெரியாமல் இருக்கிறது.ஒவ்வொரு விள்ளலாய் பிட்டு பிட்டு சட்னியிலும் கொத்துக்கறியிலும், தலைக்கறி சாந்திலும் தோய்த்து தோய்த்து சாப்பிட செம டேஸ்ட்..அதிலும் கொடுத்த குருமா இருக்கே செம டேஸ்ட்..பஞ்சு போல் மென்மையாக இருக்கிறது தோசை..சாப்பிட சாப்பிட செம டேஸ்ட்.கொஞ்சம் தோசை பிய்த்து ஈரல் கறியில் மடக்கி அப்படியே வாயில் போட்டால் கரைகிறது...சுவை நரம்புகள் அதிகமாய் மீட்டப்பட்டதால் சீக்கிரம் காலியாகி அடுத்த ஆர்டரும் தோசையாகிப்போனது....

பக்கத்து இலைக்கு கோதுமை உப்புமா வர அதை எடுத்து டேஸ்ட் பார்க்கையில் அதுவும் செம டேஸ்ட்...வழுக்கிக்கொண்டு போகிறது.முந்திரிலாம் போட்டு நெய் வாசத்துடன் இருக்க ஆஹா செம டேஸ்ட்..அட இது ரொம்ப நல்லாஇருக்கே என்று சொல்லவும் சுத்தியிருந்த கைகள் நீண்டு சீக்கிரம் தட்டைத் துடைத்துவிட்டன.....








சிக்கன் 65, கொத்துக்கறி, ஈரல் வறுவல் என எல்லாம் நன்றாகவே இருந்தது.
எல்லாம் சாப்பிட்டுவிட்டு கைக்கழுவச் செல்லும் போது ஒரு இடத்தின் சுவற்றில் குளிர்ந்த பாயாசம் கிடைக்கும் என எழுதியிருக்க, இதை எப்படி கைவிட்டோம் என்றெண்ணி கைகழுவி வந்தவுடன் பாயாசம் ஆர்டர் செய்தேன்..ஒரே ஒரு பாயாசம் போதும் என்று சொல்லிவிட்டபடியால் ஒன்று மட்டும் வர குடித்து விட்டு ஆகா,..சூப்பரோ சூப்பர் என சொல்ல, மற்றவர்களும் ஆர்டர் செய்ய மீண்டும் அவர்களின் ருசி அறிய வந்தது.வறுத்த சேமியா, முந்திரிலாம் போட்டு பாயாசம் ரொம்ப டேஸ்டியாக இருந்தது.ஊர் வந்து சேரும் வரை அதன் சுவை நாக்கைவிட்டு அகலவே இல்லை...
எல்லாம் முடிந்து பில் வர, விலை கொஞ்சம் கூடுதலாகவே தெரிந்தது.ஈரோட்டில் ரொம்ப பேமஸான ஹோட்டல் வேற, விலையும் அப்படித்தான் இருக்கும்....செட்டில் செய்து விட்டு வெளியேறி ரோட்டில் நின்று ஆசுவாசமாய் பேசிக்கொண்டிருக்க ஹோட்டலுக்கு எதிரில் ஈரோட்டின் பிரபல மரப்பாலம் முதலியார் மெஸ் ஆரம்பிக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பு பலகை கண்ணில் பட....ஒரு நாள் இங்கு வரணும் என்று சொன்னபடியே கிளம்பினோம்.

நேசங்களுடன்

ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Sunday, March 25, 2012

பவானி சாகர் அணை (Bavani Sagar Dam)


பவானி சாகர் அணை
கோவை பக்கத்துல எங்காவது நீர் இருக்கிற இடத்துக்கு போகணும் எனில் அதுக்கு பவானி சாகர் அணை ஓகே. ஒரு நாள் சுற்றுலாவிற்கு இது ஏத்த இடம். போய் சத்தியமங்கலம் மாவட்டத்தில் இருக்கிற இந்த அணைக்கு கோவையில் இருந்து காரமடை வழியாக செல்லலாம். கோவையில் இருந்து 70 கிலோ மீட்டர் இருக்கும்னு நினைக்கிறேன்..
காவிரியோட துணை நதி யான பவானி ஆறுக்கு குறுக்கே இந்த அணை கட்ட பட்டு ஈரோடு , கோபி, சத்தியமங்கலம் பாசனத்திற்கு பயன் படும் வகையில் இந்த அணை நீர் திறந்து விட படுகிறது.அப்புறம் அணையில் ஏகப்பட்ட மீன் களை பார்க்கலாம்









அப்புறம் இங்க எப்பவும் போல சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்.கோவை, சத்தி, ஈரோடு பக்கம் இருக்கிறவங்க அதிகம் இங்க கூடுவாங்க.
குழந்தைகள் பார்க் இருக்கு.குழந்தைகள் விளையாட நிறைய இடம் இருக்கு..அவங்களுக்கு நல்லா பொழுது போகும்.டைனோசர் லாம் இருக்குன்னா பார்த்துங்க...அப்புறம் ஒரே ஒரு அன்ன பறவை ..பாவம் ரொம்ப கஷ்ட பட்டு இருக்குன்னு நினைக்கிறேன்..



அணையின் மேல் மட்டம் வரைக்கும் போலாம்.மிகவும் ரம்மியமாக இருக்கும்.அப்புறம் இங்க திடீர் கடைகள் நிறைய இருக்கும் மீன் எண்ணையில் பொரிச்சது வச்சி இருப்பாங்க...தயவு செஞ்சு வாங்கி சாப்பிட்டு விடாதீங்க...அப்புறம் வாயிலேயும் வயித்துலேயும் போயிடும்...
ஒரு நாள் வர்றவங்க தானே அப்படின்னு மீன் சுத்தம் பண்ணாமல், செவுள் எடுக்காமல் மசாலா தடவி அப்படியே எண்ணையில் பொரிச்சு தருவாங்க...சாப்பீட்டீங்க....அவ்ளோதான்...புதுசா டேம் மீன் பிடிச்சு வச்சி இருப்பாங்க..அதை வேணா வாங்கி வீட்டுல சமைச்சு சாப்பிடுங்க...
அப்புறம் நம்ம ஜாதி காரங்களும் அதாங்க....குடிமகன்கள் அதிகமா வருவாங்க...ரொம்ப ஜாலியா மீன் சாப்பிட்டு கொண்டே வேலையில் கண்ணும் கருத்துமா இருப்பாங்க..அப்புறம் அதிகமா காதல் ஜோடிகள், மத்த ஜோடிகளை ஆங்காங்கே பார்க்கலாம்.இந்த பார்க் லாம் இவங்களுக்கு ரொம்ப வசதி போல...எப்படித்தான் கண்டு பிடிக்கிறாங்களோ...(ம்ம்...வயித்து எரிச்சல் தான்...). 

அப்புறம் அணையில் இருந்து வருகிற வாய்க்காலில் குளிக்கலாம்...நான் ரொம்ப நேரம் நீச்சல் அடிச்சேன்...ரொம்ப ஆழம் அதிகமாக இருக்கு....இங்க போக ரொம்ப செலவு வைக்காது..நாங்க கார்ல போனதுனால பஸ் ரூட் தெரியல..ஆனா பஸ் லாம் வருது...சனி ஞாயிறு கூட்டம் இருக்கும்..
ஒருநாள் எங்காவது போகாலாம் அப்படின்னு நினைத்தால்...இது கொஞ்சம் பெட்டர்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்



இன்னும் கொஞ்சம்...

Monday, May 2, 2011

கோவை மெஸ் - ஈமு கறி - சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை

 சுசி ஈமு ருசி ஈமு, பெருந்துறை
இன்னிக்கு ஈரோடு வந்திருந்தேன் ..போற வழியில சுசி ஈமு ருசி ஈமு அப்படிங்கற ஹோட்டலுக்கு வந்தேன் .பெருந்துறைல நம்ம புன்னகை இளவரசி சினேகா திறந்து வைத்த ஹோட்டல் ...உள்ளே இன்டீரியர் எல்லாம் நல்லாத்தான் இருக்கு ..ஆன்னா இந்த ஈமு கோழி தான் டேஸ்டே நல்லாவே இல்ல ...ஒருவேளை முதல் முதல் சாப்பிடறதால் ஏற்பட்ட உணர்வா அப்படின்னு தெரியல ..எல்லாம் ஈமு மயம்தான்.. சாப்பிட்டா கொஞ்சம் மந்தமா இருக்கிற மாதிரி தெரிகிறது ..இதுவரைக்கும் ஜீரணம் ஆகல...கடைக்குள் போன போது யாருமே இல்ல.. அப்பவே கொஞ்சம் சுதாரிப்பா இருந்திருக்கணும் ...



என்ன பண்றது புத்திக்கு தெரிகிறது வயிற்றுக்கு தெரியல ...





நல்ல சவுக் சவுக் னு இருக்கு ..மென்று திங்க வாய் வலிக்குது ..கொஞ்சம் மத மதப்பா இருக்கு.







நம்ம டிரைவர் ஒரு கமென்ட் அடிச்சார் ..இதை சாப்பிட்டு விட்டுத்தான் அன்னிக்கு சினேகா இடுப்பை எவனோ ஒருத்தன் கிள்ளிட்டான் அப்படின்னு ..என்ன பண்றது இப்போ இதை நம்ம ப்ளாக்ல போட்டா மட்டுமே நிறைய பேரை காப்பாத்தலாம் ... ஈரோடு நகர வாசிகளே , கொஞ்சமாய் சுவை செய்து பாருங்கள்..ஈமு சில்லி 80 ரூபாய் , கடாய் ஈமு 140 , ஈமு சிங்கப்பூர் 130 ரூபாய் என நிறைய வகை இருக்கிறது ...என்ன இருந்தாலும் நம்ம மட்டன் சிக்கன் காடை மாதிரி இல்லவே இல்லை ....

நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...