Showing posts with label திருச்சூர். Show all posts
Showing posts with label திருச்சூர். Show all posts

Wednesday, January 8, 2020

பயணம் - கோவை - கடற்கரை -கேரளா - சுற்றுலா

              கோவை நகரம் மலைகள் நிறைந்த ஒரு மாநகரம்.கடலும் கடற்கரையும் தவிர மற்ற நீர் நிலைகளான வாய்க்கால், குளம், ஆறு, அருவி என அனைத்தும் இருக்கிற ஊரும் கூட.கோவையில் இருந்து தமிழகத்தில் உள்ள கடல், கடற்கரைக்கு செல்வது என்பது வெகு தொலைவில் இருக்கும் உலகின் நீளமான இரண்டாம் கடற்கரையான மெரினா பீச் இருக்கும் சென்னை, கடைக்கோடியின்  கன்னியாகுமரி மற்றும் வேளாங்கன்னி இப்படி தூரம் உள்ள இடங்களுக்கு தான் செல்ல வேண்டும்.ஆனால் மிக அருகில் உள்ள கடற்பகுதி எதுவென்றால் கேரளாவின் அரபிக்கடல் தான்.



           திருச்சூரில் இருந்து ஆரம்பிக்கிறது கேரளாவின் அரபிக் கடற்கரையோரம்.திருச்சூரில் இருந்து 20 கிமீ தொலைவில் வாடனாபள்ளி பீச் இருக்கிறது.மிக அமைதியான எந்த ஒரு வணிக விளையாட்டுகளும், ஹோட்டல்களும் இல்லாத ஒரு கடற்கரை கிராமம்.தென்னைகள் நிறைந்த இந்த கிராமத்தில் ரோட்டை ஒட்டியே இந்த பீச் இருக்கிறது.மிகவும் சுத்தமாக இருக்கிறது.ஆட்கள் நடமாட்டம் அதிகமின்றி இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டவுடன் மனம் குதூகலமாகிறது.கடல் குளிப்பதற்கு ஏதுவாக இருக்கிறது.ஆனால் குளித்து முடித்தவுடன் நல்ல தண்ணீரில் குளிக்கவும், உடைகளை மாற்றவும் வசதிகள் இல்லை.திருச்சூரில் அறை எடுத்து தங்கி இருந்தால் அங்கு சென்று மாற்றிக்கொள்ளலாம்.இன்னும் வணிக மயம் ஆகாமல் இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்கிறது.உள்ளூர் மக்களுக்கு ஒரு பொழுது போக்கு இடமாக இருக்கிறது.

               திருச்சூரை அடுத்து உள்ள குருவாயூரில் சாவக்காடு பீச் இருக்கிறது.இங்கே மீன் பிடித்தல் அதிகம் நடைபெறும் இடமாகும்,கடற்கரை ஓரங்களில் எப்பவும் பெரிய பெரிய மீன்பிடி படகுகள் நிறுத்தப்பட்டிருக்கும்.சுற்றுலாவாசிகளும் அதிகம் குவிந்து இருப்பர். குருவாயூர் கோவிலுக்கு வந்தவர்கள் ஒரு எட்டு இந்த பீச்சிற்கும் போய்ட்டு வருவர்.இந்த இரண்டு கடற்கரைக்கும் கோவையில் இருந்து செல்ல அதிகபட்சம் நான்கு மணி நேரம் மட்டுமே பிடிக்கும்.அதுவும் வாடனாபள்ளி பீச் மிகவும் அருகில் இருப்பதால் மூன்று மணி நேரத்திற்குள் சென்று விடலாம்.இங்கிருந்து கேரள வரைபடத்தின் மேலும் கீழுமாய் பரந்து விரிந்த அரபிக்கடலின் கடற்கரை ஓரங்கள் இருக்கிறது.
                   இதை அடுத்து எர்ணாகுளத்தில் உள்ள செராய் பீச் தான்.இது மிகவும் வணிக மயமாக்கப்பட்ட ஒரு சுற்றுலாத்தலம்.முழுக்க முழுக்க சுற்றுலாப்பயணிகளை கொண்டே இயங்குகிறது.தங்குவதற்கு ஏற்ற அனைத்து வசதிகளும் இங்கே இருக்கின்றன. கோவையில் இருந்து ஐந்து மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம்.இங்கிருந்தும் கூட கொச்சின் நகரத்திற்கு சென்று விடலாம்.கொச்சினில் இருந்து ஃபோர்ட் கொச்சின் செல்லலாம்.இது முழுக்க முழுக்க ஒரு தீவு என சொல்லலாம்.கடலால் சூழ்ப்பட்ட ஒரு நகரமாய் இந்த ஃபோர்ட் கொச்சின் இருக்கிறது.
                      கோவையில் இருந்து ஒரு நாள் சுற்றுலாவாக கேரளாவின் கடற்கரை பகுதிகளுக்கு செல்லலாம்.நல்ல மீன் உணவுகளை உண்டு விட்டும் வரலாம்.கேரளாவில் தங்கி இன்னும் பல இடங்களை பார்க்க முடியுமென்றால் தாராளமாக முடியும்.கொச்சின் மட்டும் எனில் சாலக்குடியில் உள்ள அதிரப்பள்ளி அருவி, கோவில்கள், படகு பயணம் என அனைத்தையும் அனுபவித்து வரலாம்.கேரளாவின் ஒவ்வொரு மாவட்டமும் ஒரு சிறப்புகளை கொண்டிருக்கிறது,ஒட்டு மொத்தமாய் நல்ல உணவு, பயணம் மேற்கொள்ள கேரளா எப்பவும் சிறப்பு.




கேரளாவின் பிரசித்தி பரோட்டாவும் பீஃப்கறியும் தான்.சுவைக்க சுவைக்க நாவூறும்..

நேசங்களுடன் 
ஜீவானந்தம்          


இன்னும் கொஞ்சம்...

Wednesday, July 10, 2013

கோவை மெஸ் - ஹோட்டல் ஆலியா (ALIYA Hotel, Thrissur), திருச்சூர், கேரளா

ஒரு தடவை நானும் நம்ம உலகசினிமா ரசிகனும் திருச்சூர் போயிருந்த போது ஒரு மத்தியான வேளை...வயிறு சும்மா கப கபன்னு  பத்தி எரியுது..ஏற்கனவே பெட்ரோல் (ஹிஹிஹி.....) போட்டு இருக்கிறதால் சீக்கிரம் சாப்பிடனும் இல்லேனா ரொம்ப மோசமா போயிடும்னு சொல்லி எங்காவது நல்ல ஹோட்டலுக்கு கூட்டிட்டு போங்கப்பா என்று சொல்ல டாக்ஸி சேட்டன் போன இடம் ஹோட்டல் ஆலியா.

புறவாசல் வழியாத்தான் கூட்டிட்டு போனாங்க..ஏன்னா கார் பார்க்கிங்லயே ஒரு வழி கொடுத்து இருக்காங்க.உள்ளே சென்றதும் பழைய கட்டிடம் என்றாலும் நன்றாக வைத்திருக்கிறார்கள்.நவீன காலத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்திருக்கின்றனர்.இது அந்த ஏரியாவில் ரொம்ப ஃபேமஸான ஹோட்டல்.நாங்க போன நேரத்தில ஒரு சில சேச்சிகள் சேட்டன்கள் மட்டுமே சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.கேரளாவோட பாரம்பரியமிக்க உணவுகள் புட்டு அப்பம் கடலைக்கறி, எல்லாம் காலைல மட்டும் தான் கிடைக்கும்னு சொல்லவும் சரி... மட்டை அரிசி சாப்பிடுவோம் அப்படின்னு சாப்பாடு ஆர்டர் பண்ணினோம்.
நம்மூர் மாதிரி தலை வாழை போட்டு கூட்டு பொரியல் எல்லாம் வைக்கல..எல்லாம் பீங்கான் பிளேட்.சாதம் சூடா...சும்மா பொல பொலன்னு....மல்லிகைப்பூ போல..... செம சூப்பரா இருந்துச்சு...


4 வித பொரியல் வச்சாங்க..கேரளாவுல நமக்கு பிடிக்காத ஒண்ணு இந்த பொரியல் தான்.அதிகமா விரும்பி சாப்பிடாத காய்களில் தான் பொரியல் கூட்டு பண்ணுவாங்க போல...அதனால அதிகம் அதை விரும்ப மாட்டேன்.
மீன் குழம்பு கொண்டு வரச்சொல்லி அந்த மட்டை சாதத்தில் ஊற்றி பிசைந்து சாப்பிட அட...என்னா டேஸ்ட்...என்னதான் சாம்பார், ரசம் மோர்ன்னு எதை ஊற்றி சாப்பிட்டாலும் அந்த மட்டை சாதத்திற்கு நல்லாவே இருக்காது.ஆனா மீன் குழம்பு மட்டும் வண்டி வண்டியா வயித்துக்குள்ள இறங்கும்.அவ்ளோ டேஸ்டியா செம காம்பினேசனா இருக்கும்.
அப்புறம் ஒரு ஃபிஷ் ஃபிரை கொண்டு வரச்சொன்னோம்.கேரளாவுல கரிமீன் தான் பேமஸ்.பெரிய ஹோட்டல்களில் மத்தி வைத்திருக்க மாட்டார்கள்.எண்ணையில பொரிச்ச மீன் அவ்ளோ டேஸ்ட்.கேரளாவுல எங்க வேணுமின்னாலும் மீன் தைரியமா சாப்பிடலாம்.அந்த கேரளா கைமணத்தோட நல்ல வாசத்தோட செமயா இருக்கும்.
சோறு உள்ளே போறது கூட தெரியாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்.வயிறு நிரம்பியதும் போதும்ங்கிற அலாரம் அடிக்கவே ஏவ்...என்று ஏப்பம் விட்டுக்கொண்டே கை கழுவ சென்றோம்.
மட்டை சாதம், பிஷ் பிரை இருவருக்கும் சேர்த்து 280.00.தான்.மிக திருப்தியான சாப்பாடு.இன்னும் நிறைய மெனுக்கள் பீப் கறி, சிக்கன், மட்டன் அப்படின்னு இருக்கு.அதெல்லாம் வர்ற வழியிலேயே பெட்ரோல் போடும் போதே சாப்பிட்ட படியால் இங்கு சாப்பிடவில்லை.
திருச்சூர் சென்ரலில் இந்த ஹோட்டல் இருக்கிறது.ரயில்வே ஸ்டேசனில் இறங்கி ஏதாவது சேட்டன்கிட்டே கேட்டாலோ, இல்லை ஆட்டோ பிடித்தோ வந்து விடலாம்.ரொம்ப காலத்து ஃபேமசான ஹோட்டல்.நடந்தே வந்தாலும் நல்லா இருக்கும் கேரள வருங்கால நயன்தாரா, நஸ்ரியா, அமலாபால், அசின் அப்படின்னு ஏகப்பட்ட கேரள அம்மணிகளை பார்க்கலாம்.ஹிஹிஹி

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Saturday, May 4, 2013

ஸ்ரீராமர் கோவில், திருப்பரயார் (Thriprayar ) திருச்சூர், கேரளா

நம்ம தோழர் ஒருத்தரு ரொம்ப வருசமா இந்த கோவிலுக்கு போவாரு.இந்த தடவை நானும் வருவேன்னு சொல்லி அதிகாலையில் கோவை டூ எர்ணாகுளம் டிரெய்ன் ஏறி காலை எட்டுமணிக்குள் திருச்சூர் அடைந்தோம். ஸ்டேசனில் கால் வைத்தவுடன் சும்மா....ஜக ஜோதியா இருக்கு திருச்சூர் ரயில்வே ஸ்டேசன்...காலையில் பள்ளி கல்லூரி, அலுவலங்களுக்கு செல்லும்  ஏகப்பட்ட அம்மணிகள்...அசின், நயன் தாரா, லட்சுமி மேனன் பாவனா வடிவில்....நீண்ட கரு கரு கூந்தலுடன்  உருண்டை விழிகளுடனும்.....தாராளமான மனசுடனும்........ம்ம்ம்..வருங்கால நாயகிகளை மனதார வாழ்த்திவிட்டு ராமரை தரிசிக்க கிளம்பினோம்..

அதற்கு முன் கேரள பாரம்பரிய உணவான புட்டும் கடலைக்கறியும் சாப்பிட்டுவிட்டு கிளம்பினோம்.
திருச்சூரில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த திருப்பரயார்.நாங்கள் சென்றபோது கோவில் விசேசம் போல.அலங்கார பூக்கள் கொண்டு வீதியில் நடனமாடிக்கொண்டு இருந்தனர்.செண்டை மேளம் கொட்டி மிக அழகாக இருந்தது அந்த நிகழ்வு. (ஒருவேளை எங்களை வரவேற்க கேரள சமஸ்தான ராஜா ஏற்பாடு செய்து இருப்பாரோ )
 கோவிலுக்கு செல்லும் இருபுறமும் எப்பவும் போல நிறைய பிளாட்பார கடைகள்.வேஷ்டி, துண்டுகள், பக்தி பிரச்சார பாடல் கேசட்டுகள், அப்புறம் கேரளாவின் பாரம்பரிய லாட்டரி சீட்டு விற்பனை.வேடிக்கை பார்த்தபடியே கோவிலுக்கு நடையைக்கட்டினோம்.
வீடு போன்ற அமைப்பில் இருக்கிற கோவிலுக்குள் பயபக்தியுடன் உள்நுழைந்தோம்.கேரள கோவில்களில் உள்ளே நுழையும் போது சட்டையை கழட்டி விட்டுத்தான் செல்லவேண்டும்.நாங்களும் அதுபோலவே நாங்களும் வெற்றுடம்புடன் நுழைந்தோம்.கேரளாவின் பாரம்பரிய முறையில் இருக்கிறது கோவில்.கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. மரத்தினால் செய்யப்பட்ட சிற்பங்கள், புராதன சின்னங்கள் என அழகாய் இருக்கிறது.திருச்சூரின் வடக்கும்நாதன் கோவிலை போன்றே இங்கும் அமைக்கப்பட்டிருப்பது தனி சிறப்பு.கோவிலை ஒட்டியே திருப்பரையாறு என்கிற புழா ஓடுகிறது.பார்க்க மிக ரம்மியமாக இருக்கிறது.
பரந்து விரிந்து இருக்கிறது கோவில்.இந்த கோவிலில் மீனூட்டு என்கிற நேர்த்திக்கடன் மிகப்பிரபலமானது.ஆற்றில் இருக்கும் மீன்களுக்கு உணவு வழங்குவதை ஒரு நேர்த்திக்கடனாக வைத்து இருக்கின்றனர்.அதுபோலவே வெடி வெடிப்பதும்..இதற்காகவே தனி கவுண்டர் வைத்து இருக்கின்றனர்.நாங்களும் எங்களது பங்குக்கு வெடியும் மீன் உணவும் வாங்கி நேர்த்திக்கடனை செலுத்தினோம்.பின் ராமரை தரிசிக்க வரிசையாய் வீடு போன்ற அமைப்பில் இருக்கும் கோவிலுக்குள் உள் நுழைந்தோம்.
 
 
பயபக்தியுடன் ஸ்ரீராமரை வேண்டிக்கொண்டோம்.இங்கே அமைந்திருக்கும் விக்ரகம் நான்கு கைகளுடன் கூடிய பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் அவதாரமாகும்.இந்த மூலவரில் பிரம்மா மற்றும் பரமசிவனின் அம்சங்களும் அடங்கியுள்ளதால், இறைவனை திருமூர்த்தியாகவும் மக்கள் போற்றுகின்றனர்.மேலும் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் கோசலை கிருஷ்ணர் மற்றும் அய்யப்பன் சுவாமிகளுக்கு தனி சன்னதி இருக்கிறது.
 இந்த கோவிலின் வரலாறு என்னவெனில் அரபிக்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களின் வலையில் நான்கு விக்கிரங்கள் கிடைத்ததாம்.ராமர், லட்சுமனன், பரதன், சத்ருக்கன் ஆகியோரின் விக்கிரங்களே அவைகள்.இந்த விக்கிரங்களை பிரதிஷ்டை செய்ய பிரசன்னம் பார்த்த போது ஸ்ரீராமரை திருப்பரையாறிலும், லட்சுமணரை மூழிக்குளம், பரதரை இரிஞ்ஞாலகுடாவிலும், சத்ருக்கனை பாயம்மல் என்கிற இடங்களிலும் கோவில் அமைத்து பிரதிஷ்டை செய்தனர்.இந்தியாவிலேயே ஒரே மாவட்டத்தில் நால்வருக்கும் கோவில் இருப்பது இங்கு தான்.
இந்த விக்கிரங்களை துவாபர யுகத்தில் கிருஷ்ண பரமாத்மாவால் பூஜிக்கப்பட்டவை என்றும் துவாரகை கடலில் மூழ்கிய போது அவைகள் வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கின்றன எனவும் நம்பப்படுகிறது.மேலும் நான்கு வேதங்களையும் இந்த விக்கிரங்கள் குறிக்கின்றன.ஸ்ரீராமர் ரிக் வேதமும், லட்சுமணர் யஜுர் வேதமும், பரதர் சாம வேதத்தினையும், சத்ருகன் அதர்வண வேதத்தினையும் குறிக்கிறது எனவும் சொல்லப்படுகிறது.இந்த நால்வரையும் ஒரே நாளில் உச்சிகாலத்திற்குள் வேண்டிக்கொண்டால் அனைத்து துன்பங்களும் விலகும் என்பது ஐதீகம்.இதற்கு நாலம்பலம் காணல் என்றும் அழைப்பர்.

கோவிலுக்கு செல்லும் வழி - திருச்சூரில் இருந்து திருப்பரையார், 25 கிலோ மீட்டர் தொலைவு, பஸ் வசதிகள் இருக்கின்றன.
 விசேச விழா - பூரம் மற்றும் ஏகாதசி திருவிழாக்கள் மிக விமரிசையாக நடைபெறும்.
நேரம் -4.30 am to 12.30 pm, 4.30 pm to 8 pm.

கிசுகிசு : கோவிலில் எப்பவும் போல மலையாள அம்மணிகள்..கேரள உடை உடுத்தி பார்க்கவே அம்புட்டு அழகாய்....ம்ம்ம்...கொடுத்துவைத்தவர்கள்.
கோவில் போய்ட்டு திரும்பி வரும் போது நமக்காகவே திறந்து வைத்தது போல ஒரு கள்ளுக்கடை.நம்ம சொந்தக்காரங்களோட வருகைக்கு காத்திருந்த கடையில் மூன்றாவது ஆளாக நுழைந்தேன்.மேலும் தொடர .கள்ளு


நேசங்களுடன்

ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, March 7, 2013

கள்ளுக்கடை ஓரத்திலே....திருச்சூர், கேரளா

 கடவுளின் தேசம் - சாரி குடிமகன்களின் தேசம் - கேரளா
கள்ளுக்கடை ஓரத்திலே...திருச்சூர், கேரளா....
 
எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.

ம்ம்ம்...இப்படிலாம் சிலைடு எல்லாம் போடற அளவுக்கு என் நிலைமை ஆயிடுச்சே.....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமா இருக்கு....இதுக்கே இன்னொரு வாட்டி கேரளா போகனும் போல......
 
போன மாசம் கோவிலுக்கு போலாம்னு கேரளா திருச்சூர் போய்ட்டு அப்படியே என்னோட பக்தி பயணத்தை முடித்துவிட்டு நம்ம பயணத்தை எங்காவது ஆரம்பிக்கலாம் அப்படின்னு நம்மள கூட்டிட்டு போன சேட்டன் கிட்டே அடிபொளி கள்ளும் , பீஃப்மும் எவிட கிட்டும் என்று மலையாளத்தில் கேட்க (ஏதோ கொஞ்சம் கொஞ்சம் மலையாளம் அறியும் ஞான் ..ஹி ஹிஹி ) .....வண்டி போய் நின்ன இடம் கள்ளுக்கடை..
 
 
 
அந்த காலை வேளையிலும் நம்மோடு போட்டி போட ஒரிரு பங்காளிகள்...அந்த இடத்தின் சூழ்நிலை மிக ரம்மியமாக இருந்தது..ரோட்டோரத்தில் கடை...கடைக்கு பின்புறம் வாழை மற்றும் தென்னந்தோப்பு...
தகரக்கொட்டாயில் நம்ம கடையும் கள்ளுக்கடைக்கே உண்டான மணத்துடன் இடமும் , ஆங்காங்கே இப்பவோ அப்பவோ என தள்ளாடிக்கொண்டிருக்கிற மர பெஞ்ச்சும் போடப்பட்டிருக்கிறது...... 
இன்னும் கூட்டம் கூடவில்லை...ஒருவேளை நம்ம பங்காளிக ரொம்ப லேட்டாத்தான் வருவாங்களோ....(இதே நம்ம ஊருல ஷட்டர் முன்னாடி தவமாய் தவம் கிடப்போம்....)ஒரு சில பேர் மட்டுமே மலையாளத்தில் தீவிர ஆலோசனையில்...
 விலைப்பட்டியல் பார்த்தேன்..ரொம்ப கம்மிதான்..கிங் ஃபிஷர் பீர் பாட்டிலில் நிரப்பப்பட்டு இருக்கிறது கள்ளு.அடுக்கி வைக்கப்பட்டு இருக்கிற பாட்டில்களை பார்க்க பார்க்க மனம் குதூகலித்தது...நமக்கு போதும் என்கிற மனமே பொன் செய்யும் மருந்து என்பதால்....ஒரே ஒரு கள்ளு பாட்டில் வாங்கி ஆரம்பித்தேன் கச்சேரியை...கூட துணைக்கு பீஃப் கறியும்....
ஏகப்பட்ட சைட் டிஷ்கள்..கள்ளுக்கடையில் மட்டுமே கிடைக்கும்..மத்தி, பொரிச்ச மீன், கப்பா, போர்க், பீஃப், ஊறுகாய் என பல்வேறு வெரைட்டிகள்..நமக்கு ரொம்ப பிடிச்சது மீனும் பீஃப் தான்..மீன் சூடாக வேறு இல்லை..அதனால் மீன் சாப்பிடவில்லை..அதனால் பீஃப் மட்டுமே...இரண்டும் செம டேஸ்ட்...கொஞ்சம் கொஞ்சமாய் கள்ளு காலியாக மிதமான நிலைக்கு மனம் நிறைந்து போனது....
விலையும் கம்மிதான் ..650 மிலி 40 ரூபாய் தான்...இன்னும் அதிகம் சாப்பிட ஆசைதான்...அதிகமாய் சாப்பிட்டால் அடிக்கிற வெயிலில் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்திவிடும் என்ற அபாய காரணத்தால் ஒரு பாட்டிலோடு நிறுத்திவிட்டேன்..(இல்லேனா எப்போ திரும்பி வர்றது கோவைக்கு...அப்புறம் அங்கேயே ரூம் போட்டு ஆரம்பிக்கனும் மீண்டும்...)

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

 
கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்ம்ம்ம்ம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி  இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

 
நேசங்களுடன்
ஜீவானந்தம்
இன்னும் கொஞ்சம்...

Sunday, June 5, 2011

கேரளா திருச்சூர் பயணம்

கடவுளின் தேசமான கேரளாவிற்கு வேலை விஷயமா போயிருந்தேன். ரொம்ப கொள்ளை அழகு.இருமருங்கிலும் பச்சை பசேல் ஆக, மழையின் சாரல் எப்போதும் தூறி கொண்டிருக்க ஒரு விதமான ரம்மிய சூழல் வழி எங்கும்........இடைவிடாது மழை தன்னுடைய கடமையை செய்து கொண்டிருந்தது.


அப்புறம் காலை உணவாக நம்ம கேரளா ஸ்பெசல் புட்டு அதுக்கு ஏத்த கடலை கறி சாப்பிட்டேன்.காலையில் கேரளா வாசி களோட மெனு என்னன்னா புட்டு கடலை கறி, வெள்ளை அப்பம் பீப் கறி , முட்டை கறி , மீன் கறி இப்படி நான் வெஜ் ஆக இருக்கிறது.அப்புறம் நம்ம ஊரு இட்லி , தோசை எல்லாம் இருக்கு. ஆனா சட்னி சாம்பார் நல்லாவே இருக்காது.அவ்ளோ கேவலமா இருக்கும்.எவ்ளோ தண்ணி ஊத்த முடியுமோ அவ்ளோ தண்ணி ஊத்தி சட்னி வைப்பாங்க.பருப்பே இல்லாத சாம்பார் இங்க மட்டும்தான்.அதனால எப்பவும் முட்டை கறி பீப் கறி அப்படின்னு சாப்பிட்டேன்.நம்ம ஊரு ஹோட்டல் களும் இருக்கு என்ன இருந்தாலும் அவங்க பாணி வகையில சாப்பிடறது தான் சுவையே.

அப்புறம் திருச்சூர் போற வழியில குதிரன் மலை அப்பிடின்னு ஒரு மலை இருக்கு.அங்க ஒரு காவல் தெய்வம் இருக்கு.போற வர்ற வாகன ஓட்டிகள் காசை விட்டு எறிவார்கள்.(இறங்கி போய் உண்டியல காசு போட கஷ்டப் பட்டு வீசுவார்கள்).நிறைய வழிபாடுகள் நடக்கும்.நானும் என் பங்குக்கு வீசாம இறங்கி போய் உண்டியல போட்டேன்.



அப்புறம் மதிய உணவாக மட்டை அரி சாப்பாடு.நம்மூர் ரேசன் அரிசி போல இருக்கும்.அதுதான் கேரளா வோட பாரம்பரிய அரிசி.ரொம்ப சுவையா இருக்கும்.இதுக்கு ஏத்த மீன் கறி, பீப் கறி குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும்.நான் எப்ப போனாலும் இந்த மட்டை அரிசி சாப்பாடுதான் விரும்பி சாப்பிடுவேன்.


பொரியல், கூட்டு, ஊறுகாய் எல்லாம் வைப்பாங்க ஆனா எதுவுமே நல்லா இருக்காது.அப்பளம் தவிர.

அப்புறம் நாங்க பண்ணின வேலை இதுதான்.ஆர்ட் செட்டிங்க்ஸ்


NRI பெஸ்டிவல் ஷாப்பிங் அப்படின்னு பிசினஸ் டெவலப்.நம்ம ஊரு ஆடி தள்ளுபடி மாதிரி..(எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க)

அப்புறம் வேலை முடிஞ்சு வரும் போது வடக்கன் சேரி அப்படிங்கிற ஊரு இருக்கு.அங்க நேந்திரம் சிப்ஸ் கடைகள் நிறைய இருக்கு.எப்பவும் சூடா போட்டுகிட்டே இருப்பாங்க.கூட்டம் எப்பவும் அள்ளும்.கேரளாவிலிருந்து திரும்பி போகிற அனைத்து சுற்றுலா வாசிகளும் சிப்ஸ் வாங்குகிற இடம் இங்கதான்.ஒரு கிலோ சிப்ஸ் ரூபாய் 130 . அப்புறம் அல்வா இங்க கிடைக்கும்.சபரி மலை சீசன் அப்போ இங்க சொல்லவே வேணாம் ..அப்படி ஒரு கூட்டம் இருக்கும்.



அப்புறம் திருச்சுர்ல சுத்தி பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல.இங்க இருந்து குருவாயூர் 29 கிலோமீட்டர்தான்.அப்புறம் கொச்சின் 70 கிலோமீட்டர்.அங்க போனால் பீச் இருக்கிறது.மத்த படி விசேஷம் இல்லை.நிறைய தேவாலயங்கள் இருக்கிறது.


நேசங்களுடன்
ஜீவானந்தம் 

இன்னும் கொஞ்சம்...