Wednesday, September 5, 2018

கோவை மெஸ் - சண்முகா மெஸ் - மார்க்கெட், கரூர்


சண்முகா மெஸ், கரூர்.
                மார்க்கெட் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் இந்த உணவகம் இருக்கிறது.பழைமை வாய்ந்த கட்டிடம்.அக்ரஹாரத்தில் உள்ள வீட்டில் நுழைந்தது போல அமைப்பு.சுவரெங்கும் பக்தி மணம் கமழும் சாமி புகைப்படங்கள்.கடவுளின் வாகனங்களாக அறியப்படும் உயிரனங்கள் இங்கே சுவையாக கிடைக்கின்றன.அலுமினிய தகரம் பதித்த டேபிள்கள்.அதற்கு தோதாய் ஸ்டூல்கள்.




                    இலை போட்டவுடன் மெனுக்கள் வரிசையாய் உச்சரித்தபடி சர்வர் வர, சிக்கன் பிரியாணியும், சாப்பாடும், மட்டன் வறுவலும் நாட்டுக்கோழி குழம்பும் ஆர்டர் செய்தோம் குழம்பு வகைகள் அத்தனையும் நல்ல சுவை.பிரியாணிக்கு கொடுத்த குழம்பாகட்டும், சாதத்திற்கு கொடுத்த கறிக் குழம்பாகட்டும் மிக நன்றாகவே இருந்தது.பிரியாணியில் கறி தனியாகவும், பிரியாணி தனியாகவும் தருகின்றனர்.


                  பிரியாணியில் கறியை பொதிந்து தருவதில்லை.சாதம் நன்கு மென்மையாக வெந்திருக்கிறது.உதிரி உதிரியாக இல்லை. பிரியாணிக்குண்டான வாசம் கொஞ்சம் குறைவுதான்.குழம்போடு சேர்த்து சாப்பிட நன்றாக இருக்கிறது.தயிர்பச்சடி நீராகாரமாய் இருக்கிறது வெங்காயம் சேர்த்ததோடு.கோழிக்கறி சக்கை சக்கையாய் இருக்கிறது.பிரியாணியில் வெந்த மென்மை தன்மை இல்லை.கடினமாக இருக்கிறது.சுவையும் இல்லை கறியில்.நாட்டுக்கோழி வறுவல் குழம்பு நல்லசுவை.ஆனால் கறியை பார்த்தால் மென்மையாக இருக்கிறது பிராய்லர் போல.கலப்படம் இல்லாமல் இருக்க வேண்டுவோம்.மீன் குழம்பு சுவை இல்லை.ரசமும் சுமார்தான்.இரண்டு சாப்பாடு, ஒரு பிரியாணி, மட்டன், நா.கோழி அனைத்தும் சேர்த்து ரூ.460 ஆனது.
                                  சாப்பிட்டு விட்டு வெளியே வரும்போது எதிரில் இதே போல ஒரு சண்முகா மெஸ் இருக்கிறது.சுவை நன்றாக இருந்தால் தானே டூப்ளிகேட் போடனும்..சுமாரான சுவைக்கெல்லாம் எதுக்கு டூப்ளிகேட்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

1 comment:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....