Showing posts with label புதுச்சேரி. Show all posts
Showing posts with label புதுச்சேரி. Show all posts

Wednesday, February 12, 2014

பயணம் – மாஹி (புதுச்சேரி) கேரளா, ( MAHE ), மாஹே....ஒரு பார்வை

மாஹி (புதுச்சேரி) ( MAHE ), மாஹே....ஒரு பார்வை
கேரளாவில் தலச்சேரி போனபோது பக்கத்துல இருக்கிற மாஹே (புதுச்சேரி) யூனியன் பிரதேசத்திற்கும் போய்ட்டு வந்திடலாமே அப்படின்னு அங்க போனோம்.அரபிக்கடலோரம் இருக்கிற ஒரு அழகிய குட்டி பிரதேசம்.எங்க பார்த்தாலும் தண்ணீர் தண்ணீர்...கடல் மற்றும் ஆறுகளால் அப்புறம் நம்ம கடைகளால்....மாஹிக்குள் நுழைந்ததுமே நம்மை வரவேற்பது நம்ம கடைகள் தான்.வித விதமாய் மதுபானங்கள் வியக்கவைக்கின்றன.நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.(போதும்னு நினைக்கிறேன்..இல்லைன்னா நம்ம பேவரைட் எச்சரிக்கை வாசகம் போடனும்....குடி குடியை கெடுக்கும்னு....)



மய்யாழிப்புழா எனப்படும் ஆறு கடலில் கலக்கும் இடத்தில் இந்த குட்டி நகரம் அமைந்து இருக்கிறது.மொத்த பரப்பளவே 9 சதுர கிமீ தான்.நம்ம புதுச்சேரியோட முதல்வர்தான் இங்கயும்.பிரெஞ்ச் ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதி என்பதால் ஒரு சில பிரெஞ்ச் கட்டிடங்களைக் காணலாம்.
மாஹியில் அதிகம் சுற்றிப்பார்க்க எந்த ஒரு இடங்களும் இல்லை.ஒரு பார்க், ஒரு தேவாலயம் , ஒரே ஒரு போட் ஹவுஸ்... மஞ்சக்கல் என்கிற இடத்தில் இருக்கிற போட் ஹவுஸ்.அதிலும் ஒரே ஒரு போட் மட்டும் தான் இருக்கிறது..வாடிக்கையாளர் வருகைக்காக தவம் கிடக்கும் காட்சியினை காணலாம்.படகில் கடலிலும், புழாவிலும் கொஞ்ச தூரம் ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு வந்தால் அவ்ளோதான்.




கடற்கரை ஓரம் என்பதால் பீச் இருக்கிறது.ஆனால் அங்கு செல்ல வசதியில்லை.கேரளா அருகில் இருப்பதால் கேரள வாசம் தான் வீசுகிறது.ப்ரெஞ்ச் ஆதிக்கத்திலான வீடுகள் என்பது மிகக்குறைவே.கடலில் ஆறு கலக்கும் இடத்தில் ஒரு நீண்ட நடைப்பயண பாதை இருக்கிறது.ஆர்ப்பரிக்கும் கடலை ரசித்துக்கொண்டே வாக்கிங் செல்ல ஏற்ற இடம்.அது தான் பொழுது போக்கும் இடமாக இருக்கிறது. இந்த பார்க்கில் சுதந்திர தின போராட்டகாரர்களின் நினைவாக இரண்டு கல்தூண்கள் இருக்கின்றன. சாயந்திர நேரம் அம்மணிகளுடன் கைகோர்த்து பவனி வர மிக அம்சமாய் இருக்கிறது.பகல் பொழுதுகளில் பார்க் பென்ச்களில் படுத்துறங்கும் சுகவாசிகளைக் காணலாம்.


மாஹி முழுவதும் பெரும்பான்மையான கடைகள் நம்ம கடைகளாகவே இருப்பதால் நம்ம பங்காளிகள் அதிகம் இருக்கின்றனர்.கேரளாவை விட ரேட் குறைவாக இருப்பதால் தலச்சேரி மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மாஹி பார்டருக்கு வந்து விடுகின்றனர்.விலையும் குறைவு...மனமும் நிறைவு.....பங்காளிகளுக்கு ஏற்ற இடம்....




மாஹி / மாஹே எப்படி செல்வது....? கேரளா தலச்சேரி அருகில் இருக்கிறது.தலச்சேரியில் இருந்து ஆட்டோ, பஸ் மூலம் மாஹி / மாஹே வந்தடையலாம்.

தலச்சேரி பேமஸ் - கல்லுமக்காய்

நேசங்களுடன்

ஜீவானந்தம் 
இன்னும் கொஞ்சம்...

Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...