Showing posts with label வறுவல். Show all posts
Showing posts with label வறுவல். Show all posts

Wednesday, September 18, 2013

கோவை மெஸ் - மாம்பழ நாயுடு பிரியாணி கடை, சிலுவத்தூர் ரோடு, திண்டுக்கல்

போன வாரம் திண்டுக்கல் போயிருந்தேன்.இந்த ஊரு பூட்டுக்கு பேமஸா இருந்தாலும் இப்போ அந்த தொழிலை அவங்க செஞ்ச பூட்டாலே இழுத்து பூட்டிட்டாங்க.அதே மாதிரி தான் புகையிலை, தோல்...இதுவும் இப்போ சுத்தமா இல்ல...ஆனா.ஊரைச்சுத்தி மணக்க மணக்க பிரியாணி பண்ணும் ஹோட்டல்கள் தான் பெருகிப்போச்சு.சந்துக்கு சந்துக்கு தெருவுக்கு தெரு, ரோட்டுக்கு ரோடு இருக்கும் போல.அப்படித்தான் ஒரு ரோட்டுல சிலுவத்தூர் செல்லும் வழியில் இருக்கிற ஒரு ஹோட்டல் போர்டினைப் பார்த்தேன்.மாம்பழ நாயுடு ஹோட்டல் என்று பெயரே வித்தியாசமா இருக்க, கூட வந்த நண்பரைக்கேட்க, இங்க சுவை நன்றாக இருக்கும் என்றும், தினமலரின் அக்கம்பக்கம் எடிசனில் இவர்களின் ஹோட்டல் பத்தி வந்திருக்கு என்று சொல்லவும், நாக்கு அப்படியே  கொஞ்சம் நம நமக்க, அங்கேயே நம்ம சிங்கத்தினை ஓரம் கட்டினேன்.

சின்ன கடைதான்..ஆனாலும் விஸ்தாரமாக இருக்கிறது.அந்த மதிய வேளையிலும் புரோட்டா சூடாக ரெடியாகிக்கொண்டிருந்தது.பக்கா புரடக்சனில் இருந்த மாஸ்டர் தன் கைவரிசையினை மைதா மேல் காட்டிக்கொண்டிருந்தார்.
நண்பருக்கு ஏற்கனவே அறிமுகம் போல அந்த கடை ஓனர்..சிரித்துக்கொண்டே வரவேற்றார் எங்களை..
கடையில் தோதான இடத்தினை எடுத்து ஆக்ரமித்தோம் அனைவரும்.சீக்கிரமே மட்டன் பிரியாணி தீர்ந்துவிட சிக்கன் பிரியாணியை கேட்க,உடனடியாய் கொண்டு வந்து இலையில் வைக்க மணம் நாசியைத்துளைத்தது.கொஞ்சம் எண்ணைப்பசையின்றி பிரியாணி இருந்தாலும் சுவை நன்றாக இருந்தது.சிக்கன் நன்றாக மெது மெதுவென்று இருக்கிறது.அதற்கு மேட்சாக சிக்கன் வறுத்த குழம்பினை கொண்டு வந்து ஊற்ற...அது கரண்டியில் இருந்து நாசுக்காய் வழுக்கிக்கொண்டே விழுந்தது.மிக அற்புதமான டேஸ்ட்..இரண்டும் போட்டி போட்டுக்கொண்டு உள்ளிறங்க, ஸ்பெசலால் ஒரு சிக்கன் பிரை சொல்ல. அதுவும் உடனடியாக வந்து சேர்ந்தது.மிளகு போட்டு பிரட்டிய சிக்கன் செம டேஸ்டாக இருந்தது.




பிரியாணியை சுவைத்த பின் மொறுகுன புரோட்டா கேட்கவும் சூடாய் வந்து விழுந்தது.சிக்கன் வறுவலுடன் சேர்த்து மொறு மொறுவென சாப்பிடுகையில் அருமையாய் இருக்கிறது.அந்த சூடான புரோட்டா மணம் இன்னும் நினைவில் இருக்கிறது.

இன்னும் நிறைய அயிட்டங்கள் இருந்தாலும் மனதும் வயிறும் நிறைந்து போனதால் அதிகம் சாப்பிடமுடியவில்லை.மட்டனில் சுக்கா, குடல், தலைக்கறி என இருக்கிறது.
ஒவ்வொரு தீபாவளிக்கும் இந்த கடையில் வான்கோழி பிரியாணி ஸ்பெசல் உண்டாம்.ஒரு வாரம் செம கூட்டமாக இருக்குமாம்.
விலையும் மிகக்குறைவுதான்.அந்த ஏரியாவில் இது ஒரு கடை மட்டுமே விஸ்தாரமாக இருக்கிறது.சுவையும் நன்றாக இருக்கிறது.
பழனி ரயில்வே கேட் அருகில் இந்த கடை இருக்கிறது.அந்தப்பக்கம் போனால் சாப்பிட்டுப்பார்க்கலாம்.நம்ம பங்காளிகளுக்கு ஏற்ற கடை..காரம், மணம், திடம் என எல்லாம் ஒரு சேர இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Saturday, January 19, 2013

கோவை மெஸ் - ராஜகணபதி ஹோட்டல், சேலம்

ஒரு மத்தியான நேரம் சேலம் வந்த போது பசி கிள்ளி எடுக்க, நம்ம சிங்கத்தை பஸ் ஸ்டாண்ட் அருகில் நிறுத்திவிட்டு பக்கத்துல இருந்த ஆட்டோ டிரைவர்கிட்ட தெளிவா(..?) கேட்டேன்.செல்வி மெஸ் தவிர வேற எந்த ஹோட்டல் நல்லா இருக்கும் அப்படின்னு...அவரு உடனே சொன்னது ராஜகணபதி ஹோட்டல்...
பஸ் ஸ்டாண்ட் எதிரில் ஆலுக்காஸ் இருக்கிறது அதன் அருகில் இருக்கிற ஒரு சந்தில் இந்த ஹோட்டல் இருக்கிறது..
 
 
 
 
 
 போர்டு மிக அதிகமாக வைத்து இருக்கிறார்கள்..உள்ளே நுழைந்ததும் ஒரு சில பேர் போராடிகொண்டிருந்தனர் நாட்டுக்கோழி வறுவலோடு..இலையில் சாப்பாட்டினை விட அதிகம் இடம் பிடித்துக்கொண்டு இருந்தது கோழியின் எலும்புகளே...
நாமும் ஒரு தோதான இடத்தினை தேர்வு செய்து அமர்ந்தோம்...உட்கார்ந்து சுத்தி முத்தி பார்த்ததில் ஒரு விலைப்பட்டியல் போர்டு பார்த்ததும் இருந்த பசி எல்லாம் பறந்து போயிற்று...அவ்ளோ விலை...மட்டன் பிரியாணி 170, நாட்டுக்கோழி பிரியாணி 180 என எல்லா அயிட்டமும் நூறுக்கு மேல் தான்...சாப்பாட்டினை தவிர....ஆகா...யானை விலை குதிரை விலை இருக்கும் போல..என்றெண்ணி சர்வரிடம் கேட்டேன்...என்னங்க...இவ்ளோ ரேட் இருக்கு..கோவைல எல்லாம் கம்மியா இருக்கு...அதை விட பெரிய சிட்டியா இந்த சேலம்...என்றெல்லாம் அடுக்கடுக்காக கேள்விக்கணைகளை தொடுத்தபோது அசராமல் பதில் வந்தது....கிட்டதட்ட இரண்டு கிளைகள் இருக்கு...மேட்டூரிலும் சேலத்திலும்...பிராய்லர் கோழி உபயோகிப்பதில்லை என்றும், 1975 இல் இருந்து செயல்பட்டு வருகிறது என்றும் சொல்லி நம்ம வாயை அடைத்தார்...சரி..வந்தது வந்தோம்...ஒரு கை பார்ப்போம் என்று முடிவு பண்ணி...சாப்பாடு மற்றும் நாட்டுக்கோழி சுக்கா, நாட்டுக்கோழி ஃபிரை இரண்டும் ஆர்டர் பண்ணினோம்...
இலையை போட்டு வெங்காய பச்சடி வைத்தனர்....பொரியல் இல்லாமல் வெறும் பச்சடி மட்டும் வைக்கின்றனர்...
சாப்பாடு சுட சுட ஆவி பறக்க வைத்தனர்...முதலில் சிக்கன் குழம்பு...செம கெட்டியாக...நல்ல சுவையுடன் இருக்கிறது...அடுத்து சிக்கன் சுக்கா...இதுவும் நன்றாக இருந்தது...அடுத்து வந்த மட்டன் குழம்பு, அதுவும் கெட்டியாக இருக்கிறது..மிக நல்ல டேஸ்ட்...
நாட்டுக்கோழி பிரை.....கொண்டு வருகையிலே சுவை மூக்கைத்துளைக்கிறது...ஒரு தட்டு முழுக்க கோழியை பிச்சி பிச்சி போட்டு கறிவேப்பிலை தூவி மிக அழகாக கொண்டு வைத்தனர்...அதிக கேள்வி கேட்டதினால் என்னவோ மிக சிரத்தை எடுத்து செய்து இருப்பார் போல...... ஆகா...என்னா டேஸ்ட்.. நாங்களும் கொஞ்ச நேரம் கோழியோடு போராடிக்கொண்டு இருந்தோம்...மிக சுவையோடு...
கடைசியில் ரசம்...இது நல்ல சுவை..டம்ளரில் கேட்டு வாங்கி குடித்தேன்..தயிரும் கெட்டி தயிர்...குழம்பு முதல் தயிர் வரை அனைத்தும் கெட்டியாகவே இருக்கிறது ரசத்தை தவிர....
 
விலை இப்போது பெரிதாக தெரியவில்லை..சுவை அதிகம் இருப்பதால்...கூட்டமும் அதிகம் வந்து கொண்டிருக்கிறது..நிறைய சினிமா ஆட்கள் இந்த கடைக்கு வாடிக்கையாளர்களாம்...கடைசியாக வந்து சென்றவர் டிரம்ஸ் சிவமணி என்றும் கொசுறு தகவல் சொன்னார்...
 
எல்லாம் முடித்து வெளியில் வந்து நின்றபோது அருகிலேயே இன்னொரு கடை இதே பெயரில்...அந்த கடைக்கு வெளியில் நின்ற ஒருவர்...இது தான் ஒரிஜினல் கடை...அது டுப்ளிகேட் என்று சொல்ல  ஒரு டவுட்டில் சர்வரிடம் கேட்க...இருவரும் அண்ணன் தம்பிகள் தான்...இருவரும் பிரிந்து விட்டனர் என்று ஒரு கிளைக்கதையை சொல்ல ஆரம்பிக்க ....விடு....ஜூட்...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Thursday, July 26, 2012

கோவை மெஸ் - M.S.R பிரியாணி ஹோட்டல் - கோவை

M.S.R பிரியாணி ஹோட்டல்
கோவையில் நிறைய முஸ்லிம் அன்பர்கள் இருக்கிறதால் இங்க பெரியாடு என்கிற மட்டன் (மாட்டு இறைச்சி) அதிகம்.அதனால் பீப் பிரியாணி கோவையில் பல இடங்களில் நல்ல சுவையா கிடைக்கிறது.இதுல ரொம்ப முக்கியமான ஹோட்டல் போத்தனூர் டு சுந்தராபுரம் ரோட்டில் இருக்கிற MSR ஹோட்டல் ரொம்ப பேமஸ்.போத்தனூர் வழியா செல்லும் போது திடீர்னு ஞாபகம் வந்ததால் இந்த ஹோட்டலுக்கு போனோம்.
முன்புறம் சின்ன  கடை போல் தான் இருக்கிறது ஆனால் உள்ளே ஏகப்பட்ட இடம்.நிறைய பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் சுவரை ஒட்டி ஓரு அடி அகல டேபிள் டாப் வைத்து இருக்கின்றனர்.போய் அமர்ந்ததும் நமக்கு வேண்டிய பிரியாணி, சில்லி பீப், பீப் சுக்கா வறுவல் ஆர்டர் பண்ணினோம்.



 

நல்ல வாசத்துடன் பிரியாணி இருந்தாலும் சுவை முன்பு போல் இல்லை. கொஞ்சம் கம்மியாக தான் இருக்கிறது.ஆனாலும் நன்றாக இருக்கிறது .ரொம்ப வருடங்களுக்கு முன்பு இன்னும் சுவையாக இருந்தது.அப்புறம்  கறி மெதுமெதுவென்று பஞ்சு போல் நன்றாக இருக்கிறது.வறுவல் கொஞ்சம் காரத்துடன் இருக்க, குடிமகன்களுக்கு ஏற்ற சைட் டிஷ் போல் இருக்கிறது.அப்புறம் சில்லி வறுவல் நன்றாக இருக்கிறது. என்ன ...ரொம்ப நேரம் எண்ணையில் பொரிக்க வைப்பதினால் என்னவோ கொஞ்சம் சிவந்து இருக்கிறது.மத்தபடி டேஸ்ட் ஓகே.இரண்டு பிரியாணி ஒரு வறுவல்,ஒரு சில்லி 120 ரூபாய்.சாப்பிட்டு கையை கழுவிய பின்னும் பிரியாணியின் வாசம் இருக்கத்தான் செய்கிறது.
மதிய  நேரம் இங்கு கூட்டம் அதிகமாக இருக்கும்.அப்புறம் சிக்கன் , காடை மீன் என்று எல்லா வகையும் இருந்தாலும் இங்க பீப் மட்டும் அதிகமா விற்பனை ஆகும்.பீப் சாப்பிட விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம்.விலையும் குறைவுதான்.


நேசங்களுடன்
ஜீவானந்தம்
 
இன்னும் கொஞ்சம்...

Tuesday, July 3, 2012

கோவை மெஸ் - ஜெர்மன் ஹோட்டல் , காரணம்பேட்டை , சூலூர்

ஜெர்மன் ஹோட்டல்
சூலூர் காரணம் பேட்டை தாண்டி சென்று கொண்டு இருக்கையில் பசியின் காரணமாக இருபக்கமும் கண்கள் தேடிக்கொண்டு இருக்கையில்  இந்த ஜெர்மன் ஹோட்டல் கண்ணுக்கு தென்பட்டது.
இது  ஒரு டிரைவ் இன் ஹோட்டல் போல.உள்ளே நுழைந்ததும் இயற்கை சூழலுடன் ஹோட்டல் ரொம்ப விஸ்தாரமாக இருக்கிறது.நல்ல காற்றோட்டத்துடன்  மிகவும் அமைதியாய் இருக்கிறது.நிறைய தனித்தனி குடில் அமைப்பில் டேபிள்கள் போடப்பட்டு இருக்கின்றன. கார் நிறுத்தும் வசதியும் குடிலுக்கு அருகிலேயே இருக்கிறது.
நாங்கள் ஒரு குடிலுக்குள் நுழைந்தோம்.ஒவ்வொரு குடிலிலும் வாஷ் பேசின் வைத்து இருக்கிறார்கள்.நாங்கள் காடை பிரை, நாட்டு கோழி வறுவல், பட்டர் நான், பிரியாணி ஒன்றும் ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தோம்.கொஞ்ச நேரத்தில் அனைத்தும் வந்து சேர்ந்தன.
நாட்டுக் கோழி வறுவல் கிள்ளி போடப்பட்ட வரமிளகாயுடன் செம காரத்துடன் பட்டர் நானுக்கு மிக பொருத்தமாக இருந்தது.அது போலவே மட்டன் பிரியாணியும் நன்றாக  இருந்தது.காடை செம டேஸ்ட் ஆக மொறு மொறுவென ரொம்ப சுவையுடன் இருந்தது.மொத்தத்தில் அனைத்தும் அருமை.ரொம்ப நேரம் பேசணும்... பார்க்கணும்... கூடவே சாப்பிட்டு கொண்டே இருக்கணும் அப்படின்னு இருக்கிற காதலர்களுக்கும், மத்தவங்களுக்கும் செமையான இடம்.நேரம்  போவதே தெரியாமல் கடலை போடும் ஜோடிகளுக்கு சரியான இடம்.

இது திருச்சி செல்லும் பைபாஸ் ரோட்டில் இருக்கிறதால் இங்க கார்களின் எண்ணிக்கை எப்போதும் இருக்கிறது.கார்கள், பஸ்கள் நிறுத்த நல்ல இடம் வசதி இருக்கிறது.முக்கியமாய் குடில் அமைப்புகள்...ஆட்களின் எண்ணிக்கைக்கு தகுந்தது போல குடில்களில் டேபிள்கள் இருக்கின்றன.

கிசுகிசு:.பக்கத்து குடில ஒரு க்ரூப் அம்மணிகள்......ம்ம்ம்ம்.....என்ன பண்றது ....நமக்குத்தான் இந்த மாதிரி கொடுப்பினை எல்லாம் அமைய மாட்டேங்குதே...


நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Sunday, June 24, 2012

பாண்டிச்சேரி குடிமகன்களின் தேசம் - 1


பாண்டிச்சேரி  குடிமகன்களின் தேசம் - 1

                        எச்சரிக்கை
                  குடி குடியை கெடுக்கும்
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மட்டும்.

வணக்கம் (குடி)மக்களே.......
இது கொஞ்சம் மப்பான பதிவு...
ஏதோ...... படம் ஆரம்பிக்கும் போது சர்டிபிகேட் காட்டுவாங்களே அது மாதிரி நம்ம நிலைமை ஆயிடுச்சு..ம்ம்ம்...எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு.
ஓகே...மேட்டருக்கு வருவோம்....
பாண்டியில் இருந்து ஈ சி ஆர் ரோட்டில் கிளம்பினோம்.செல்லும் வழியில் கொஞ்ச தூரம் எங்கும் நம்ம கடைகளை காணோம்...கேட்டால் இது தமிழ்நாடு பார்டராம்.....கொஞ்ச தூரம் சென்றவுடன்  மீண்டும் பாண்டி நம்மை வர வேற்றது..முதல் வேலையாக நம்ம கடையை தேடி சென்றோம்..அருகிலேயே சாராய கடையும்.அரசு நடத்தும் சாராய கடை....தகர சீட் ஷெட் போட்டு எந்த ஒரு உட்காரும் வசதியோ இல்லாமல் இருக்கிறது.



உள்ளே நுழைந்தால் ஏகப்பட்ட ஏழைகளின் சொர்க்கமாக இருக்கிறது. சீல் வைக்கப்பட்ட இரண்டு கேனில் சாராயம்.அதை அளந்து கொடுக்க கேனுக்கு ஒருவர். ஐந்து ரூபாயில் இருந்து தொடங்குகிறது. சாராயத்துடன் சோடா கலந்தே தருகிறார்கள்.தொட்டு கொள்ள சத்தியமாய் மட்டை ஊறுகாய் இல்லை.(எடுத்து செல்ல மறந்து விட்டேன்)சரக்குக்கு சைட் டிஷ் கொடுக்கும் இரண்டு மூதாட்டிகளின் வாழ்வாதாரமாக இந்த கடை இருக்கிறது.மாங்காய், சுண்டல், அவிச்ச முட்டை, மீன், கிழங்கு, கருவாடு என அனைத்தும் இருக்கிறது.கொஞ்சம் சுகதாரமற்று சாராயக்கடைக்கே உரித்தான அம்சங்களுடன் இருக்கிறது.
பாண்டிச்சேரி அரசே வில்லியனூர் என்கிற ஊருக்கு அருகில் சாராய ஆலை வைத்து இருக்கிறதாம்.மூன்று டாக்டர்களின் மேற்பார்வையில் இது தயாரிக்க படுகிறதாம்.சொன்னது அங்குள்ள ஒரு பங்காளி...நம்ம பங்குக்கு நாமும் கொஞ்சம் (ஹி ஹி ஹி ) டேஸ்ட் பார்த்து விட்டு வெளியேறினோம்.அப்படி ஒன்றும் பெரிதாய் இல்லை.வோட்கா போன்று வாசமில்லாமல் இருக்கிறது....அப்புறம் இன்னும் திருப்தி அடையாமல் அடுத்து  சென்றது அருகில் உள்ள ஈ சி ஆர் ஒயின்ஸ்...

நல்ல விசாலமாக பீச்சுக்கு அருகில் இருக்கிற இந்த கடையில் தஞ்சமடைந்தோம்.ரொம்பவும் பிடித்த போஸ்டர் பீரினை ஆர்டர் செய்து விட்டு காத்து இருந்தோம்.(இந்த பீர் கொஞ்சம் கூட கசப்பே இல்லாமல் குடிக்க குடிக்க சுவையாய் இருக்கிறது)...கூடவே சைடு டிஷ் ஆக கணவாய் மீன், பீப் வறுவல் நெத்திலி 65....என....




கணவாய் மீன் கொஞ்சம் ரப்பர் மாதிரி இருக்கிறது.முதல் முறை சாப்பிடுவதால் என்னவோ நெத்திலி அளவுக்கு மீன் பிடிக்கவில்லை.நன்றாக இருந்தது என்று நண்பர் சொன்னார்.ஆனால்.பீப் பெப்பர் வறுவல் செம டேஸ்ட்...நல்ல மிருதுவாக இருக்கிறது இந்த வறுவல்...அப்புறம் நெத்திலி மீன்...சொல்லவே தேவையில்லை..அவ்ளோ சுவை....சரியான பதத்தில்..உப்பும் மசாலாவும்...நாக்கில் இன்னும் எச்சில் ஊறுகிறது...சரியான சைடு டிஷ்...
எப்படியோ...போதும் போதும் என்கிற அளவுக்கு.....சாப்பிட்டு விட்டு வேணும்கிற அளவுக்கு பார்சல் வாங்கிட்டு செங்கல் பட்டு கிளம்பினோம்.....
கிசுகிசு : இதை படித்து விட்டு உங்களுக்கு ஞாபகம் எடுத்தால் கம்பெனி பொறுப்பாகாது..அப்புறம் இது என்னோட 200வது பதிவு.ரொம்ப மப்பான பதிவு,,,

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...