Showing posts with label முருகன். Show all posts
Showing posts with label முருகன். Show all posts

Tuesday, April 2, 2013

கோவையின் பெருமை - மருதமலை முருகன் கோவில், கோவை

நம்ம மருதமலை முருகன் கோவிலில் சமீபத்தில்தான் கும்பாபிஷேகம் செய்து இருப்பதால் ஒரு விசிட் போலாம்ன்னு கும்பாபிஷேகம் முடிஞ்ச மூணாவது நாள் போனேன்...
நல்லா சுத்தமா வைத்து இருக்காங்க.பார்க்கவே பளிச்சுனு இருக்கு.எல்லா கோவில் கோபுரமும், படிகளும் வர்ணம் பூசப்பட்டு நல்லா வச்சிருக்காங்க...பார்த்தவுடன் தெய்வீக களை ஏற்படுகிறது.விழா முடிந்தும் கூட்டம் குறையல இன்னமும்...நிரம்பி வழிகின்றது மலை அடிவாரமும், கோவில் அடிவாரமும்....
இந்த மார்ச் மாசம் தான் புதிதாக கட்டின ஏழு நிலை ராஜ கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் பண்ணியிருக்கிறார்கள்...முருகனின் கருவறைக்கு எதிரில் இருக்கும் படியாக ராஜகோபுரமும், தனித்தனி மண்டபங்களும் இருக்கின்றன.கீழிருந்து முருகன் சன்னதிக்கு வர கிரானைட் படிகளும் அமைத்து உள்ளனர்.கோபுர நுழைவாயிலில் பிரம்மாண்ட வெண்கல கதவு ஒன்றும் பொருத்தப்பட்டு இருக்கின்றன.சன்னதிக்கு வரும் வழியில் ஒரு மண்டபம் வேறு அமைத்து இருக்கின்றனர்.அதில் ஏகப்பட்ட தூண்கள் மற்றும் வண்ண வண்ண சாமி சிலைகள் இருக்கின்றன..
 
 
 
 
 
 
 
 
 

கோவில் பிரகாரம் முழுவதும் கூட்டம் நிறைந்து இருக்கிறது.அரசமரத்து பிள்ளையார் ரொம்ப வசதிகளோடு மாறி இருக்கிறார்.முருகன் சன்னதிக்கு எதிரில் இருக்கும் கொடிமரத்துக்கு அருகில் பொலிவின்றி இருந்த இரண்டு யானை சிலைகள் கூட தற்போது வண்ணமயமாக காட்சி அளிக்கிறது.பக்தி மார்க்கமாக அனைவரும் அலைந்து கொண்டிருந்தனர்.முடிந்து போன யாக சாலையில் ஒரு கூட்டமே கும்பிட்டுக்கொண்டிருந்தது...ஒவ்வொரு கடவுளுக்கும் ஒரு யாக குண்டம்...கிட்டததட்ட முப்பதுக்கும் மேற்பட்ட அக்னி குண்டங்கள்....
மேலே பஞ்சாமிர்த கடை வேறு வைத்து இருக்கிறார்கள்.முருகனின் அருள் பரப்பும் புத்தக, மற்றும் டிவிடி கடைகள், மேலும் தற்காலிக பந்தலில் பிரசாத கடை இருக்கிறது.அதில் புளியோதரையும் பொங்கலும் பத்து ரூபாய்க்கு ஒரு சிறிய தொன்னையில் தருகின்றனர்....
யானை பசிக்கு சோளப் பொரி போல...
ஆயினும் பசி அடங்கியது...பாவைகளை பார்த்ததும்...
நாங்க போன அன்னிக்கு நல்ல வெயில் வேற....காலையிலயே பின்னி எடுக்குது...ஆனா குளிர்ச்சியா இருந்தது..காரணம் அம்மணிகள்..எம்புட்டு பேரு...
எப்படியோ முருகனை தரிசனம் பண்ணிட்டு கீழிறங்கினோம்.எப்பவும் போல தள்ளுவண்டி கடைகள்..அதில் பொரி, எலந்தைபழம், மாங்காய் என சில்லறை வணிகம்...
 

விழாக்கோலம் பூண்டிருக்கிறது இன்னும் இந்த மருதமலை முருகன் கோவில்.கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்ட இந்த ராஜ கோபுர கட்டுமான பணி ஒருவகையில் முடிந்து தற்போது கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது.(கீழிருக்கும் புகைப்படங்கள் முன்பு எடுத்தவை )

முருகனுக்கு அரோகரா.....கந்தனுக்கு அரோகரா...
போனவருசம் போனது - மருதமலை 

கிசுகிசு : கோவிலுக்கு போற மலைப்பாதையில் அதிகமா காலேஜ் அம்மணிகளையும் கள்ள அம்மணிகளையும் காண முடியல.ஒருவேளை இந்த விசேஷம் முடிஞ்சதும் அடுத்ததா அவங்க விசேஷத்திற்கு வருவாங்களோ என்னமோ...... ஹி ஹி ஹி ....

நேசங்களுடன்
ஜீவானந்தம்.


இன்னும் கொஞ்சம்...

Wednesday, October 31, 2012

வெளிநாட்டு அனுபவம் - பத்துமலை,கோலாலம்பூர், மலேசியா

கோலாலம்பூரில் இருந்து முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் பத்துமலை என்கிற பட்டு கேவ்ஸ் (Batu Caves )..அப்பா அம்மா கிட்டே கோவிச்சுகிட்டு மலை ஏறின நம்ம ஊரு முருகன் இருக்கிற இடம்..ஜக ஜக என தங்க கலரில் மிக உயரமாக ஜொலிக்கும் முருகன்.வெளிநாட்டிலும் நம்ம ஊர் கடவுளுக்கு இவ்வளவு வரவேற்பா என ஆச்சரிய பட வைக்கிறது இந்த கோவில். உள்ளே நுழையும் போதே பெரிய வேல் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி இடம் நல்ல விஸ்தாரமாக  இருக்கிறது.முறையாய் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.(நம்ம ஊர் மாதிரி குப்பை கூளங்கள் காணோம்).மலையின் அருகே ஓடுகிற பத்து என்கிற ஆறின் பெயரால் இந்த குகை அழைக்கப்படுகிறது.இந்த முருகன் கோவிலை நிர்மாணித்தது ஒரு தமிழர் என்பது இன்னும் ஆச்சரியமே...
அடிவாரத்தில் இருந்து குகைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.நமக்கு படியில் செல்ல தெம்பு இல்லாத காரணத்தினால் கீழேயே இருந்து முருகனை தரிசித்தோம்.கூடவே வெளி நாட்டு அம்மணிகளையும்...
மேலே இருக்கிற குகைக் கோவிலில்  சுண்ணாம்புக் குன்றுகளிலான பல குகைகள் இருக்கின்றன.அரிய வகை விலங்கினங்களும் தாவரங்களும் இருக்கின்றனவாம்..இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.சரி..சரி..நமக்கு எதுக்கு வரலாறு எல்லாம்...
சும்மா ஜக ஜகன்னு ஜொலிக்கிறாரு முருகன்..அவர மாதிரியே ஒரு சில அம்மணிகளும் ஜொலிக்குதுங்க...என்ன பண்றது..நம்ம முருகனுக்கு வந்த வாய்ப்ப பாருங்க...வெளிநாட்டுல சும்மா ஜெக ஜோதியா.....
 
 
 
 
 
 
 அடிவாரத்தில் நிறைய புறாக்களின் கூட்டம் இருக்கிறது.அவை பறப்பதும் அமர்வதும் என அழகாய் இருக்கிறது....அதை சுற்றி ஒரே கூட்டம்....புறாவை பார்க்கவா இல்ல அம்மணிகளை பார்க்கவான்னு தெரியல...
தமிழக கோவில்களில் இருப்பது போலவே இங்கும் ஒரு சில பிளாட்பார கடைகள்.தமிழ் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல், என சிறப்பாய் இருக்கிறது.
 
 
 
 
இந்த பத்துமலை கோவில் அருகிலேயே ராமாயண குகை என சொல்லப்படுகிற குகைக்கு செல்லும் வழியில் ஆஞ்சனேயர் சிலை ஒன்றும் இருக்கிறது.அப்புறம்...இங்க தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுமாம். நேர்த்திக் கடன்களுக்காக  பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பல காவடிகள் எடுப்பார்களாம் இந்து,  சீன, மலாய் மக்கள்...

கோலாலம்பூரில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் இந்த பத்து மலை இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


இன்னும் கொஞ்சம்...

Tuesday, June 14, 2011

மருதமலை பயணம்

இன்னிக்கு எங்காவது போலாம்னு பிளான் பண்ணி பக்கத்துல இருக்கிற மருதமலை முருகன் கோவிலுக்கு போயிட்டு வந்தேன் (தோம் )
.எத்தனை தடவை போனாலும் அலுக்காத கோவில் நம்ம மருதமலை கோவில்தான்.எப்பவும் கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்( நான் கோவில் சுத்தி உள்ள பசுமையை சொன்னேன்...ஹி ..ஹி ..ஹி எப்படி ஒரு சமாளிப்பு...)
இன்னிக்கு பார்த்தா செம கூட்டம்.எல்லாம் குடும்பத்தோட வந்திருக்கிறாங்க (ஹி ..ஹி நானும்தான் குடும்பத்தோட)..என்னனு கேட்டா பிரதோஷம் மாம்...அப்புறம் தான் தெரிஞ்சது ..காலேஜ் திறக்க இன்னும் 10 நாள் இருக்கே ..அப்புறம் எப்புடி கண்ணுக்கு குளிர்ச்சியாய் இருக்கும்...அப்புறம் என்ன பண்றது ..அங்க இருக்கிற கடையெல்லாம் போட்டோ எடுத்து இந்த பதிவை தேத்திட்டேன் ..
மலை வழியில அங்கங்கே நம்ம காதல் பறவைகள், கள்ள பறவைகள் உட்கார்ந்திருக்கும்..பார்க்க பரவசமாய் இருக்கும் ..இன்னிக்கு ரோடே வெறிச்சோடி இருக்குது .....அப்புறம் கோவில் திருப்பணி நடை பெறுகிறது .புதிதாக கோவிலை கட்டிகொண்டிருக்கிறார்கள் மேலே செல்ல மாடிப்படி அமைத்து கொண்டு இருக்கிறார்கள்..எப்படியோ ஒரு செய்தி சொல்லிட்டோம் அப்புறம் யாராவது மொக்கை பதிவு போடறேன்னு சொல்லிட கூடாதில்ல...

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...