Saturday, March 5, 2011

ராஜ் டிவி

ராஜ் டிவி ல ஒரு ப்ரோக்ராம் பார்த்தேன் .



சரியான ஏமாத்து பேர்வழிங்க .ஒரு நடிகர் முகத்த கொஞ்சம் மறைச்சு இவர் யாருன்னு சொன்னா 30000 பரிசாம்.இந்த வாரம் நம்ம சூர்யா விக்ரம். பார்த்த வுடனே சொல்லிடலாம் .ஆனா கால் பண்ணின எல்லாரும் தப்பு தப்பா சொன்னாங்க.ஒருத்தர் ஜீவா ஆர்யா அப்படினு சொல்றான், இன்னொருத்தன் மாதவன் சிவா அப்படின்னு சொல்றான் .ஒருத்தரும் சரியாய் சொல்லல. டைம் போய்ட்டு இருக்கு, கடைசியில 5000 பரிசு சொல்லி ஒருத்தர் சரியாய் சொன்னார்.எனக்கென்ன சந்தேகம் னா இவங்களே போன் பண்ணி தப்பு தப்பா சொல்லுவாங்களோ அப்படின்னு ..ஒரு நிமிடத்துக்கு 10 ரூபாய் ...எவ்ளோ பேரு கால் பண்ணி பண்ணி காசை இழந்திருப்பாங்க.நம்ம ஆளுகளுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்ல .எந்த முட்டாள் பயலாவது 30000 பணம் தருவானா? கிட்டத்தட்ட ஒரு100 பேரு 10 நிமிடம் கால் பண்ணினா 1000 x 10 = 10000 ...அம்மாடியோவ் ...எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க...இதுல வெய்டிங் வேற ....

5 comments:

  1. ஏங்க ராஜ் டிவிக்கு பொழப்பு நடக்க வேண்டாமா?

    ReplyDelete
  2. என்ன தப்பா சொல்வாங்களா? நான் இந்த நிகழ்ச்சி பார்த்ததில்லை.. சும்மா கடந்துபோகும் போது இவ்ளோ ஈசியா கேக்கராங்களேன்னு நினைச்சுப்பேன்.. :( எல்லாம் ஏமாத்து.. வீட்டு வீட்டுக்கு போன் குடுத்தா இன்னும் நிறைய ஏமாத்தலாம்..

    ReplyDelete
  3. ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுவர்கள்..

    ReplyDelete
  4. பேராசை பெருநஷ்டம். முன்னோர்கள் சரியாகதான் சொல்லி உள்ளனர்.நாம்தான் புரிந்துகொள்ளவேண்டும்.
    ஆனாலும் யார் கேட்கிறார்.ஒவ்வொருவரும் தூங்கி எழும் போதும் பேரும் பணக்காரர்களாக எழ வேண்டும் என்று தான்
    விருப்புகிறார்கள்.அதன் விளைவுகள் இவை...

    ReplyDelete
  5. how can we stop this cheating programs ?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....