Tuesday, August 11, 2015

கோவை மெஸ் - நியூ ஷோபா ஹோட்டல், மடவாளம், திருப்பத்தூர்

                            திருப்பத்தூரில் இருந்து ஆலங்காயம் என்கிற ஊருக்கு செல்கின்ற வழியில் ஆறு கிலோமீட்டர் தொலைவில் மடவாளம் என்கிற ஊர் இருக்கிறது.ஒரு வேலை விசயமாக அந்த ஊர் வழியே சென்ற போது கூட வந்த நண்பர் இந்த ஊரில் ஒரு ஹோட்டல் இருக்கிறது.நான்வெஜ் ரொம்ப நல்லாயிருக்கும் என்றும், திருப்பத்தூரில் இருந்து வந்து  இங்கு சாப்பிட்டுவிட்டு செல்வோம் என சொல்லவும், அடுத்த நிமிடத்தில் அந்த ஹோட்டலில் ஆஜரானோம்.
                      ரோட்டு ஓரத்திலேயே இருக்கிறது இந்த நியூ ஷோபா ஹோட்டல்.சின்ன கடைதான்.பத்துக்கு பத்து ரூம் அளவு கொண்ட இரு கடைகள் ஒன்று சேர்ந்து ஒரு ஹோட்டலாக இருக்கிறது.ஒரு ரூம் சமையல் அறையாக இருக்கிறது.ஹோட்டல் வெளியே கூண்டுக்குள் அடைபட்ட காடைகள், என்னிக்கு ரோஸ்ட் ஆவோம் என்று தெரியாமலே கீச் கீச் என கத்திக்கொண்டிருந்தன.ஹோட்டலுக்குள்ளே நுழையும் முன்பே வரவேற்கிறது, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த மட்டன் குழம்பின் வாசனையும்,  அடுத்து அந்த ஹோட்டல் உரிமையாளரும்....கடைக்கு வெளியே தயாரான குஸ்கா பெரிய பாத்திரத்தில் இருக்கிறது.அதன் வாசம் நம்மை உள்ளிழுக்கிறது.... 

                      உள்ளே ஒரு செல்ப் இருக்கிறது..அதில் ஏகப்பட்ட குண்டாக்கள்...எல்லாம் இலை போட்டு மூடப்பட்டு இருக்க அதை ஒரு பார்வை பார்த்துவிட்டு டேபிளில் அமர்ந்தவுடன், கடைக்காரர் வாழையிலையை போட்டுவிட்டு ஒப்பிக்க ஆரம்பித்தார்......
          சிக்கன் பிரியாணி, குஸ்கா, சிக்கன் வருவல், மட்டன் வருவல், காடை ரோஸ்ட், இரத்தப்பொரியல், தலைக்கறி, குடல்கறி, ஈரல் ஃப்ரை, மீன் ஃப்ரை, முட்டைக்குழம்பு என வரிசையாய் சொல்ல, அவரது வாயையே பார்த்துக்கொண்டிருந்தோம்... என்னது......இந்த ஊரில் இருக்கிற இந்த சின்னக்கடையில் இவ்ளோ வெரைட்டியா ...என ஆச்சர்யப்பட்டபடியே, குஸ்காவும், சைடுக்கு மீனும், குடல் கறியும் சொன்னோம்...நாமும் எவ்வளவு அயிட்டம் தான் டெய்லியும் சாப்பிடுவது....(டேஸ்ட்க்காக எல்லாவற்றிலும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிடத்தான் முடிகிறது...)
           
            நண்பர் சாதம் வாங்கிக்கொள்ள, நான் குஸ்கா வாங்கிக்கொண்டு குடல்ஃப்ரையை டேஸ்ட் பண்ண ஆரம்பித்தேன்...குடல் ஃப்ரை நன்றாகவே இருக்கிறது.சாதத்தோடு குழம்பினை பிசைந்து சாப்பிட செம டேஸ்டாக இருக்கிறது.குஸ்காவும் பிரியாணி மணத்துடன், நன்கு சுவையாக இருக்கிறது.அரிசியும் நன்கு வெந்து பொலபொலவென்று பிரியாணி போல் உதிரி உதிரியாக இருக்கிறது.தனியாய் வேகவைத்த சிக்கன் அல்லது மட்டன் இதனோடு சேர்த்தால் சுவைமிகுந்த சிக்கன்/மட்டன் பிரியாணி ரெடி....
ரத்தப்பொரியல் சின்ன வெங்காயம் சேர்த்து மிக சுவையாக இருந்தது.
                   குஸ்காவுக்கு தொட்டுக்கொள்ள அவ்வப்பொழுது சிக்கன் குழம்பும், மட்டன் குழம்பும் வாங்கி சாப்பிட ஆரம்பித்தேன்..இரண்டும் நல்ல சுவை...குஸ்காவுக்கு செம காம்பினேசன்...
அப்புறம் மீன்...பொரித்தது....சுவை எப்பவும் போல ஓகே...
சாப்பிட்டு முடித்து வெளிவர, இன்னும் நான்கு பேர் உள்ளே நுழைந்தனர்....
விலை மிகக்குறைவாகத்தான் இருக்கிறது..
           ஒரு சின்ன ஊர் தான்..அதில் இவ்வளவு வெரைட்டி இருப்பது ஆச்சர்யம்தான்...மிலிட்டரி ஹோட்டல் போல அவ்வளவு மெனுக்கள்.....கிட்டத்தட்ட பலவருடங்களாக நல்ல சுவையுடன் இந்த ஹோட்டலை நடத்தி வருகின்றனர்......உண்ட திருப்தியுடன் அங்கிருந்து கிளம்பினோம்.... அந்தப்பக்கம் போனிங்கன்னா ஒரு வாய் சாப்பிட்டு விட்டு வாங்க...

ஆட்டுக்கால் பாயா சாப்பிடனுமா...திருப்பத்தூரில்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





7 comments:

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....