Showing posts with label சந்தை. Show all posts
Showing posts with label சந்தை. Show all posts

Saturday, January 4, 2014

ஃபேஸ்புக் துளிகள் - 1

ஃபேஸ்புக் துளிகள்
              இன்று கொஞ்சம் அதிகாலையிலேயே எழுந்து விட்ட படியால் சும்மா இருக்க வேண்டாமே என்றெண்ணத்தில் வரும் வாரத்திற்க்கான காய்கறி தேவையைப் பூர்த்தி செய்யலாமே என்று சாய்பாபா கோவில் அருகே உள்ள காய்கறி மார்க்கெட் சென்றிருந்தேன்.உள் நுழையும் போது ஃப்ரஷ் ஆன காலைப் பொழுதைப்போலவே மிகவும் ஃப்ரஷ்  ஆக வரவேற்றன நுழைவாயிலில் இருந்த புதினா, கொத்தமல்லி கறிவேப்பிலைகள் கொத்துகள்...
                    அந்த காலைவேளையிலும் ஏகப்பட்ட கடைகளில் காய்கறிகளும், அண்ணாச்சிகளும், வீட்டில் மனைவி பிக்கல் தாங்காமல் ஒரு சேஞ்சுக்கு காய்கறி வாங்க வந்த ஒரு சில குடும்பத்தலைவர்களும், ஓய்வு பெற்ற பெரியவர்களும் தத்தம் நேரங்களை கழித்துக்கொண்டிருந்தனர் காய்கறிகளை வாங்கிக்கொண்டு.....
            ஏகப்பட்ட சந்து பொந்துகளை உள்ளடக்கி நீண்டு பரந்து விரிந்து இருந்தது மார்க்கெட்.ஒரு ஆள் மட்டுமே செல்லக்கூடிய இடைவெளியில் இருபுறமும் கடை கண்ணிகள்(கன்னிகள் என்பது சுத்தமாய் இல்லை...).
           வந்திருந்த வாடிக்கையாளர்களை வரவேற்று ஒவ்வொரு கடைக்காரரும் பேரத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.பேரத்தில் முடிந்த வியாபாரம் காய்கறிகளாய் கைப்பைகளில் முடங்கியது.
           நானும் ஒவ்வொரு கடையாய் ஏறி இறங்கி ( படிக்கட்டுகள் இல்லாமலே ) எனது தேவைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தேன் .கடைசியாய் உருளைக்கிழங்கு மட்டும் பாக்கியிருந்தது. வாங்க சென்ற கடையில் கொஞ்சம் கூடியிருந்த நால்வர் கூட்டத்தில் நானும் ஐக்கியமானேன். அக்கூட்டத்தில் ஒரு பெண்மணியும் ஒரு திருநங்கையும் அடக்கம்...அப்போது கடைக்காரருடன் உரையாடிய திருநங்கையின் பேச்சில் இரட்டை அர்த்தம் தொனிக்கவே, கடைக்காரரின் முட்டுச்சிரிப்பில் கள்ளப்பார்வையும் சேர்ந்து கொள்ள, முகம் சுளித்த பெண்மணி அடுத்த கடை நோக்கி நகர ஆரம்பித்தார்...பொது இடங்களில் பேசித்திரியும் திருநங்கைகள் சமூகத்தில் தன் மதிப்பை இழந்து கொண்டிருப்பது இந்த மாதிரி செய்கைகளில்தான்.என்ன தான் தங்களுக்கும் சம உரிமை வேண்டும் என்று சொன்னாலும் இம்மாதிரி பேசித்திரியும் ஒரு சில வர்க்கங்களால் எப்போதும் சமூகத்தில் ஒன்று பட முடியாது.

----------------------------------------------

நூறடி ரோட்டில் ஒரு பிரபல மருத்துவமனை...நண்பரின் மனைவிக்கு பெண்குழந்தை பிறந்த சேதி கேட்டு ஆஜரானேன்...
நுழைவாயிலிலேயே ஏகப்பட்ட கூட்டம்...நிறை மாதமும் குறை மாதமுமாய் ஏகப்பட்ட பெண்டிர்கள் மருத்துவரைக்காண...உள் நுழைந்ததுமே ஆஸ்பத்திரிக்குண்டான எந்த ஒரு மணமோ சுவையோ நிறமோ குணமோ (தேங்கஸ் திரி ரோசஸ்) சுத்தமாக இல்லை...ஒவ்வொரு வார்டிலும் கர்ப்பம் தாங்கிய பெண்மணிகள், நோயாளிகள் என அவர் தம் குடும்பத்தினரோடு காத்திருக்கின்றனர்.ஒவ்வொரு முகத்திலும் விதவிதமாக கவலை படிந்த சந்தோசம் தேங்கிக்கிடக்கிறது.
         வெள்ளையுடை அணிந்த தேவதைகள் போல் நர்ஸ்கள்.... மலையாளக்கரையில் வந்தவர்கள் என அப்பட்டமாக பறை சாற்றியது அவர்களின் தாராள மனதும், நடை உடை பாவனைகளும்....கண்கள் அவர்களை நோக்கி சென்றாலும் தவிர்க்க முடியாது தத்தளித்தது மனது...சிஸ்டர் என்று அழைக்க மனம் ஒப்பாது திடப்படுத்திக்கொண்டு அவர்களை கடந்து சென்றேன்....
         முதல் புளோரில் ஐசியு அறைக்கு முன்பாக கைகளை பிசைந்தபடி நின்று கொண்டிருந்த நண்பரை சந்தித்து விவரம் கேட்டபடி அலைபாய்ந்தது மனது அறுவைச்சிகிச்சை முடிந்து வெற்றிப் பெருமிதத்துடன் வெளி வந்த இளம் டாக்டரின் ஸ்டெதஸ் கோப் செய்த புண்ணியத்தினை நினைத்தபடி....தொடர்ந்து எட்டுமாதங்களாய் ஆரம்பத்தில் இருந்து சுகப்பிரசவம் என்று நம்பிக்கை அளித்த டாக்டர் தற்போது ஏதேதோ காரணங்களைச்சொல்லி சிசேரியன் செய்துவிட்டனர்....என்று சொன்ன நண்பரை சமாதானப்படுத்திவிட்டு, நான் சொன்னது, மாசம் பொறந்து விட்டது, ஆஸ்பத்திரி வாடகை, டாக்டர்கள் சம்பளம் என ஏகப்பட்ட வேலைலாம் இருக்குல்ல அதான்...தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா அது போதும்....சொல்லிவிட்டு திரும்பிப்பார்க்கையில் சாய்வு தளத்தில் இருந்து நிறைமாதக்கர்ப்பிணியை அவசர அவசரமாக ஸ்டெச்சரில் தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தனர் ஆஸ்பத்திரி சிப்பந்திகள்.....


நேசங்களுடன்
ஜீவானந்தம்





இன்னும் கொஞ்சம்...

Friday, August 9, 2013

சந்தையில் ஒரு நாள் - பொன்மலை , திருச்சி

திருச்சி, பொன்மலை, ஒரு ஞாயிற்றுக்கிழமை வேளை...ரொம்ப சிறப்பா கொண்டாடணும்னு காலையிலேயே ஆரம்பிச்சுட்டு ஒரு 7 மணி வாக்கில் கிளம்பினோம் சந்தைக்கு.கூட்டம் கூட ஆரம்பித்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே அம்மணிகள் தெரிய ஆரம்பித்தனர்.நிறைய பேர் தத்தம் குடும்பத்துடன் வந்திருந்தனர்.குழந்தைகளும் ஆர்வத்துடன் அனைத்தையும் அறியும் பொருட்டு வந்திருந்தனர்.எல்லாத்தையும் நோட்டம் விட்ட படியே மீன் வாங்கும் இடத்திற்கு சென்றோம்.வகை வகையான மீன்கள் வாடிக்கையாளர்களை வரவேற்றுக்கொண்டிருந்தது.இன்னிக்கு யார் வீட்டுல எந்த மீன் குழம்போ என யோசித்துக்கொண்டே கூட்டத்தில் ஐக்கியமானோம்.


ஒரு வேனில் உயிரோடு மீன்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தனர் ஆற்றில் பிடித்தது மட்டுமில்லாமல் இங்கு வேனிலும் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.நம்ம காவிரி ஆத்து ஜிலேபி மீன் தான்.உயிரோட கிலோ 160.( செத்த மீன்களை யாரும் வாங்க மாட்டாங்க போல..)அதுக்கும் கூட்டம் அலை மோதுது.


பொறுமையா முதலில் ஒரு ரவுண்ட் வந்தோம் ஏற்கனவே ரவுண்ட் கட்டி இருப்பதால்...என்னென்ன மீன்கள் எவ்ளோ விலை என்பதை எல்லா கடையிலும் விசாரித்து கொண்டு எந்த கடையில் விலை குறைவாக இருக்கிறதோ அங்கு குவிந்தோம்.பாறை, வஞ்சிரம், நெய்மீன், நண்டு, இறால், வாவல், சங்கரா, ஜிலேபி, விரால், கெண்டை, என ஏகப்பட்ட வகைகள். வாழை இலையில் கும்பலாய் குவித்து வைக்கப்பட்டிருந்தன.



நெய் மீன் வாங்கினோம்.ஃபிங்கர் ஃபிஷ் ஃபிரை செய்வதற்காக...(அந்த செய்முறை யை போட்டோ எடுக்க மறந்துட்டேன் )



பொறிப்பதற்கு கிழங்கா மீன் வாங்கினோம்.விலை ரொம்ப சல்லிசாக இருக்கிறது.ஒன்னரை கிலோ 100 மட்டுமே.அப்புறம் சங்கரா மீன்.குழம்பு வைப்பதற்காக.அதுவும் விலை குறைவே..



மூன்று மீன்களையும் வாங்கி அங்கேயே ஒரு பையனிடம்  கொடுத்து சுத்தம் செய்து வாங்கினோம்.(கிலோவிற்கு 10/15 வாங்குகிறார்கள்.பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்) அப்புறம் அம்மணிகள் ஏரியாவான காய்கறி விற்கும் இடத்தில் சமையலுக்கு தேவையான மற்ற பொருட்களையும் வாங்கிவிட்டு நேரம் பார்க்க இன்னும் ஒரு சில நிமிடங்களே இருந்தது நம்ம கடை திறக்க.இப்போ கிளம்பினால் பார்சல் வாங்கிகொண்டு போக சரியாக இருக்கும் என்றெண்ணி கிளம்பினோம்.
அதுக்கப்புறம் என்ன..மீன் வேக வேக நாங்களும் வெந்து கொண்டிருந்தோம்.ஒரே மஜா தான்.


பதிவர் சந்திப்பு -  நாள் -1.9.2013, இடம் - சென்னை  - அனைவரும் வாரீர்

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...

Monday, March 7, 2011

சந்தைக்கு வந்த கிளி - பொன்மலை திருச்சி

நம்ம தலைவர் பாட்டு பத்தின பதிவு இல்ல .திருச்சி பொன்மலை ல நடந்த சந்தைக்கு போனேன்

.நம்ம கிராமத்து நினைவுகளை கிள்ளி பார்த்து விட்டது .அப்புறம் நிறைய உள்ளூர் வியாபாரிகள் கடை பரப்பியிருந்தனர்.அதிலும் ஏகப்பட்ட உயிரினங்களோட விற்பனைதான் அதிகம் இருந்தது .வாத்து, கோழி , புறா, கிளி, முயல்,காடை, கௌதாரி அப்படின்னு ...நல்ல கூட்டம் ( மக்களும்தான் )





மீன் கடை நிறைய இருந்தது.நல்ல வகை வகையான மீன்கள், வாவல், திருக்கை , விரால், இறால், நண்டு, ஆரான், அப்படின்னு நிறைய ....விலையும் கம்மியா தான் இருந்தது.


நாங்களும் எங்க பங்குக்கு ஒரு சில மீன்களை வாங்கி வந்தோம் ..வீட்டுல ஒரே மீன் வாசம்...நல்ல சுவையா சாப்பிட்டோம் ..

நேசங்களுடன்
ஜீவானந்தம்

இன்னும் கொஞ்சம்...