Wednesday, October 31, 2012

வெளிநாட்டு அனுபவம் - பத்துமலை,கோலாலம்பூர், மலேசியா

கோலாலம்பூரில் இருந்து முதலில் சுற்றிப் பார்க்கப் போன இடம் பத்துமலை என்கிற பட்டு கேவ்ஸ் (Batu Caves )..அப்பா அம்மா கிட்டே கோவிச்சுகிட்டு மலை ஏறின நம்ம ஊரு முருகன் இருக்கிற இடம்..ஜக ஜக என தங்க கலரில் மிக உயரமாக ஜொலிக்கும் முருகன்.வெளிநாட்டிலும் நம்ம ஊர் கடவுளுக்கு இவ்வளவு வரவேற்பா என ஆச்சரிய பட வைக்கிறது இந்த கோவில். உள்ளே நுழையும் போதே பெரிய வேல் ஒன்று நம்மை வரவேற்கிறது.கோவிலை சுற்றி இடம் நல்ல விஸ்தாரமாக  இருக்கிறது.முறையாய் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.(நம்ம ஊர் மாதிரி குப்பை கூளங்கள் காணோம்).மலையின் அருகே ஓடுகிற பத்து என்கிற ஆறின் பெயரால் இந்த குகை அழைக்கப்படுகிறது.இந்த முருகன் கோவிலை நிர்மாணித்தது ஒரு தமிழர் என்பது இன்னும் ஆச்சரியமே...
அடிவாரத்தில் இருந்து குகைக்கு செல்ல படிகள் இருக்கின்றன.நமக்கு படியில் செல்ல தெம்பு இல்லாத காரணத்தினால் கீழேயே இருந்து முருகனை தரிசித்தோம்.கூடவே வெளி நாட்டு அம்மணிகளையும்...
மேலே இருக்கிற குகைக் கோவிலில்  சுண்ணாம்புக் குன்றுகளிலான பல குகைகள் இருக்கின்றன.அரிய வகை விலங்கினங்களும் தாவரங்களும் இருக்கின்றனவாம்..இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.சரி..சரி..நமக்கு எதுக்கு வரலாறு எல்லாம்...
சும்மா ஜக ஜகன்னு ஜொலிக்கிறாரு முருகன்..அவர மாதிரியே ஒரு சில அம்மணிகளும் ஜொலிக்குதுங்க...என்ன பண்றது..நம்ம முருகனுக்கு வந்த வாய்ப்ப பாருங்க...வெளிநாட்டுல சும்மா ஜெக ஜோதியா.....
 
 
 
 
 
 
 அடிவாரத்தில் நிறைய புறாக்களின் கூட்டம் இருக்கிறது.அவை பறப்பதும் அமர்வதும் என அழகாய் இருக்கிறது....அதை சுற்றி ஒரே கூட்டம்....புறாவை பார்க்கவா இல்ல அம்மணிகளை பார்க்கவான்னு தெரியல...
தமிழக கோவில்களில் இருப்பது போலவே இங்கும் ஒரு சில பிளாட்பார கடைகள்.தமிழ் பெயர்ப்பலகை தாங்கிய ஹோட்டல், என சிறப்பாய் இருக்கிறது.
 
 
 
 
இந்த பத்துமலை கோவில் அருகிலேயே ராமாயண குகை என சொல்லப்படுகிற குகைக்கு செல்லும் வழியில் ஆஞ்சனேயர் சிலை ஒன்றும் இருக்கிறது.அப்புறம்...இங்க தைப்பூசத் திருவிழா தமிழகத்தை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப் படுமாம். நேர்த்திக் கடன்களுக்காக  பால் காவடி, மச்சக் காவடி, பன்னீர்க் காவடி, சர்ப்பக் காவடி, பறவைக் காவடி, தூக்குக் காவடி என பல காவடிகள் எடுப்பார்களாம் இந்து,  சீன, மலாய் மக்கள்...

கோலாலம்பூரில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் இந்த பத்து மலை இருக்கிறது.

நேசங்களுடன்
ஜீவானந்தம்


11 comments:

  1. போன வருடம் போயிருந்தோம், நானும் என் மனைவியும். இனி எப்போது இங்கே வரப்போகிறோம் என்று எண்ணி, மெதுவாக நடந்து மலை மேலே சென்று தரிசனம் செய்து வந்தோம்.

    நீங்கள் மலை மேலே சென்று பார்க்க இன்னும் வாய்ப்புகள் வரும்.

    ReplyDelete
  2. பத்துமலை முருகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் நிறைய தடவை பார்த்துட்டேன். சினிமாவுல...,

    ReplyDelete
  3. பட்டு கேவ்ஸ்// இல்லை. பத்து கேவ்ஸ். batu என்பது மலாய் சொல். தமிழில் `கல்’ என்று அர்த்தம். cave என்பது ஆங்கில சொல். தமிழில் `குகை’ என்று அர்த்தம். கற்குகை. கல் மலை - என்றாகி பின் பத்துமலையாகி பத்துகேவ்ஸ் ஆகி இப்போ பட்டு கேவ்ஸ் ஆகிவிட்டது. எங்க ஊரில் அற்புதமான சுற்றுலாத்தலம். அந்த தங்க முருகனின் சிலை கம்பீரமாக நிற்பதால் சுற்றுவட்டார மலாய் குடும்பத்துக் குழந்தைகள் அரண்டுப்போகிறார்கள் என பல புகார்கள், இருப்பினும் முருகன் காவல் தெய்வமாகவே காட்சி கொடுத்துக்கொண்டிருக்கின்றார். மலாய்க்காரர்கள் காவடி எடுக்க மாட்டார்கள். சீனர்கள் தமிழர்களை விட மிக நீளமான அலகு குத்தி திருவிழா நாளில் வலம் வருவார்கள். தைபூச திருநாளில் திருவிழா நடைபெறும். திருவிழா நாளில் செல்வதை விட, மற்ற நாட்களில் செல்வது சிறப்பு. அழகாக பராமறித்து வருகிறார்கள். அதுவும் அந்த உயரமான முருகனின் தங்க முலாம் லேசில் சிதையாது என்கிறார்கள்.

    ReplyDelete
  4. படமும் பகிர்வும் பார்க்க தூண்டுகிறது மலேசியாவை வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
  5. அழகிய படங்களுடன் சிறப்பான பதிவு.

    ReplyDelete
  6. படங்கள் அனைத்தும் மிக அருமை....உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  7. நான் போயிருக்கேன் ஆனா உங்கள மாறி தான் மலை மேல போகல

    ReplyDelete
  8. அஹா, என்ன உலகம் சுற்ற கிளம்பிடீங்க !! அருமை....நான் மேலே ஏறி சென்றிருந்தேன், அருமையான இடம். உங்களது பதிவை பார்த்து மீண்டும் எனக்கு இங்கு சென்றது எல்லாம் யாபகம் வந்தது !

    ReplyDelete
  9. //இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகள் 40 கோடி ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.//

    ஏங்க.. மருத மலை கூடத்தான்.

    ReplyDelete
  10. அருமையான படங்களுடன் இனிய பயண அனுபவம்...

    நன்றி...
    tm1

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....