Saturday, April 7, 2012

காருண்யா பார்க் - மத ஒற்றுமை


காருண்யா பார்க்
கோவையில் உள்ள புகழ் பெற்ற பல்கலைகழகம் காருண்யா பல்கலைகழகம். இங்க ஒரு பார்க் மற்றும் பெதெஸ்தா சர்வதேச ஜெப மையம் இருக்கிறது.இவை அவங்களோட கிறித்துவ மதத்தை பரப்புவதற்காக கட்டபட்டு இருக்குன்னு நினைக்கிறேன்...


நல்ல பசும்புல்வெளிகள், சிறு மண்டபங்கள், தண்ணீர் உள்ள தடாகை கள் என நல்ல வேலைப்பாட்டுடன் அமைக்க பட்டு இருக்கிறது.இந்த பார்க் உள்ளே சர்ச் செல்லும் வழியில் ஆங்காங்கே வைக்கப் பட்டு இருக்கும் ஸ்பீக்கர்களில் எப்போதும் தேவாலய பாடல்கள் ஒலித்து கொண்டு இருக்கின்றன.
அப்புறம் பார்க்கின் நுழைவாயிலில் சிறுவர்கள் விளையாட கூடிய இடங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த பார்க் தாண்டி கொஞ்சம் உள்ளே சென்றால் அங்கு இயேசுவின் வாழ்க்கை வரலாறு பல்வேறு வடிவங்களாக அமைக்கப்பட்டு இருக்கிறது.









இயேசு நாதர் துன்புறுத்த படும் காட்சிகள் போன்ற   சிலைகள் நன்றாக வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.இதை காணுபவர்கள் கிறித்துவ மதத்தை பற்றி அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று அவர்களின் உருவ சிலைகளை வடிவமைத்து உள்ளனர்.

நல்ல அமைதியான எந்த ஒரு ஆரவாரமும் இன்றி மனம் அமைதி கொள்ளுகிற சூழல் மலைத்தொடரின் அடிவாரத்தில் அமைக்கப்பட்டு இருக்கிற இந்த இடத்தில் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அனைத்து மத மக்களும் வந்து இந்த இடத்தினை வந்து கண்டு களிப்பது ஒரு சிறப்பாகும்.
மதங்களை மீறி இங்கு மனங்களுக்கு ஒரு அமைதி ஏற்படுவது என்பது நிச்சயமான உண்மை....
ஞாயிறு அன்று இங்கு நல்ல கூட்டம் காணப்படும்.கிறித்துவர் அல்லாது மற்ற மதத்தினை சேர்ந்த மக்களும் வந்து இளைப்பாறி கொள்வது ஒரு அதிசயமாகும்.
குழந்தைகளுடன் வரும் பெற்றோர்கள் அவர்களை விளையாடவிட்டு அப்படியே கையோடு கொண்டு வந்திருக்கிற கட்டுசோறுகளை சாப்பிட்டு கொண்டே தத்தம் கதைகளை பேசி பொழுது போக்க மிக சிறந்த இடம்.கண்ணுக்கு குளிர்ச்சியான பசுமையினை ரசிக்க இங்கு செல்லலாம்..

நேசங்களுடன்
ஜீவானந்தம்


16 comments:

  1. உங்க பதிவுகளை தொடர்ந்தாலும் எனது Dashboard-ல் பதிவுகள் தெரிவதில்லை. என்ன பிரச்சனை? நீங்கள் எழுதும் இத்தகைய பயணம் சார்ந்த கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை

    ReplyDelete
  2. மோகன் குமார் said...
    உங்க பதிவுகளை தொடர்ந்தாலும் எனது Dashboard-ல் பதிவுகள் தெரிவதில்லை. என்ன பிரச்சனை? நீங்கள் எழுதும் இத்தகைய பயணம் சார்ந்த கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை

    ---

    Me too facing same prob!!!!

    ReplyDelete
  3. //உங்க பதிவுகளை தொடர்ந்தாலும் எனது Dashboard-ல் பதிவுகள் தெரிவதில்லை. என்ன பிரச்சனை? நீங்கள் எழுதும் இத்தகைய பயணம் சார்ந்த கட்டுரைகள் எனக்கு பிடித்தமானவை//
    எனக்கும் அதே பிரச்சினை நண்பரே. எனது Dashboard-ல் கடைசியாக நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய "வாய்க்கால்" பதிவு தான் வருது...
    unfollow செஞ்சு மறுபடியும் follow செஞ்சு பார்த்துட்டேன்..அதே பிரச்சனை தான்..

    கோவையில் இருக்கும் போது காருனியா கல்லூரிக்கு சென்று உள்ளேன்....அங்கு சென்று வந்தால் ரொம்ப peacefull-ஆக இருக்கும்....

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. எனக்கும் அதே பிரச்சினை

    எனது Dashboard-ல் கடைசியாக நீங்கள் ஒரு வருடத்துக்கு முன்பு எழுதிய "வெயில் " பதிவு தான் வருது.

    unfollow செஞ்சு மறுபடியும் follow செஞ்சு பார்த்துட்டேன்..அதே பிரச்சனை தான்..

    add to link - add by URL பண்ணி பார்த்துட்டேன் முடியல.

    ஐய்யா பெரியவரே (கோவை நேரம்) என்னான்னு பாருங்கோ.

    ReplyDelete
  6. சொரணை கெட்ட ஹிந்து எத வேணுமென்றாலும் பாப்பான்..ஊருக்கு மத்தியில பந்தல் போட்டு பேனர் வச்சு இன்னிக்கு இந்த இடத்தில நூறு ஹிந்துக்களை மதம் மாத்தபோறேன்னு ஒரு கிருஸ்துவனோ,ஒரு துலுக்கனோ விளம்பரம் பண்ணியிருந்தா இந்த பய (அதாங்க நம்ம ஹிந்து) போயி பாத்துட்டு அவன் குடுக்குற மோர் தண்ணிய ( அது மூத்திரமா இருந்தாலும்) வாங்கி குடிச்சுட்டு நல்லா இருக்குன்னு சொல்லிட்டு வருவான்.அதுனாலதான் இந்த நாயிங்கள (அதாங்க நம்ம ஹிதுவை) மத்த நாயிங்க குனிய வச்சு.....இன்னும் எத்தனை ஆர்.எஸ்.எஸ்..வந்தாலும்,ஹிந்து முன்னனி வந்தாலும் திருந்துறது ரொம்ப கஷ்டமுங்கோ...

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. hi bro.... ur msg was nice... it s nt church but it was a prayer centre.
    pirarthana sthalam. people frm all religions used 2 visit this place n pray thr ...

    ReplyDelete
  10. @thiagarajan:

    plz b conscious and write the comments... try 2 respect others feelings n their faith.

    ReplyDelete
  11. மிக ரம்மியமான இடங்கள்...படம் அனைத்தும் மென்மையா இருக்கு .எனக்கும் Dashboard ல தெரிய மாட்டேங்குது.நீங்க இப்ப பதிவே எழுதறது இல்லன்னு தப்பா நெனச்சிட்டேன்.

    ReplyDelete
  12. எதனால் dash board இல் தெரிய மாட்டேங்குது என்று தெரிய வில்லை...விரைவில் சரி பார்க்கலாம்..

    ReplyDelete
  13. நன்றி மோகன்குமார், வெளங்காதவன், பாவா, ராஜ், மனசாட்சி, தியாகராஜன், மணிமாறன், மற்றும் அனானி ஆகியோருக்கு...

    ReplyDelete
  14. @ தியாகராஜன்..
    என்னங்க இது...என்னென்னமோ சொல்றீங்க..நமக்கு அரசியல் வேனாமுங்க...மதம் வேண்டாம்...மனிதம் வளர்ப்போம்...நான் ஒரு பொழுது போக்கு இடம் மட்டுமே சொல்லி இருக்கறேன்.உங்களுக்கு பிடிச்சா போங்க..இல்லைனா விட்டு விடுங்கள்.மத்த படி எதுக்கு ஹிந்து , ஹிந்துத்துவா...எல்லாம்..நீங்க இளையவரோ..இல்லை முதியவரோ.தெரியாது,,,நமது காலங்களில் வரும் தலை முறையினருக்கு மதங்கள் , ஜாதிகள் இல்லாத சமுதாயத்தை ஏற்படுத்தி கொடுப்போம்..எனது தளத்திற்கு வந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  15. அமைதியான இடத்தை எங்களுக்கு தெரிவித்தற்கு நன்றி புகைப்படங்கள் நன்றாக இருந்தது ஜீவா கண்டிப்பாக குடும்பத்துடன் இந்தவாரம் போகிறோம்

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....