Saturday, April 28, 2012

பொன்னூத்தம்மன் கோவில் - வரப்பாளையம் - கோவை


பொன்னூத்தம்மன் கோவில்

கோவை டு மேட்டுப்பாளையம் ரோட்டில் துடியலூர் தாண்டி வட மதுரை என்ற ஊர் இருக்கிறது.அந்த ஊரில் இருந்து தடாகம் செல்லும் வழியில் பன்னிமடை என்கிற ஊர்  இருக்கிறது.அந்த ஊரில் இருந்து வரப்பாளையம் என்னும் ஊரை அடைய வேண்டும்.வழி நெடிகிலும் பசுமை நிறைந்த தோப்புகளை காணலாம்.கோவிலுக்கு செல்லும் வழியில் ஆலமரம் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றால் கோவில் அடிவாரம் இருக்கிறது.கோவில் செல்லும் மலை பாதையை இரும்பு கேட் போட்டு வைத்து இருக்கின்றனர்.ஆள் அரவமற்ற காடு, ஓங்கி உயர்ந்த மலை. பயங்கர நிசப்தம்... சுற்றிலும் கண்ணுக்கெட்டும் தூரம் பசுமை...
பக்தியை விரும்புகிறவர்கள், இயற்கையை ரசிப்பவர்கள்,  தனிமையை விரும்புகிறவர்கள் அப்புறம் தள்ளிட்டு போறவங்க தாரளாமா போகலாம்.




மலையின் கரடு முரடான பாதை இப்போது கொஞ்சம் செப்பனிடப்பட்டு செல்லும் அளவுக்கு வைத்து இருக்கிறார்கள். கொஞ்சதூரம் சென்றவுடன் கோவிலின் படிகள் நம்மை வரவேற்கின்றன.படிகளை தாண்டி சென்றவுடன் பாறைகள் சூழ்ந்த இடத்திற்கு இடையில் கோவில் இருக்கிறது.அனைத்து சுவர்களுக்கும் மஞ்சள் நிறம் அடித்து இருக்கின்றனர்.பார்க்கவே தெய்வீக அம்சமாக இருக்கிறது.கோவிலின் ஒரு பாறையின் அடியில் குகை போன்ற அமைப்பில் அம்மன் உள்ளே வீற்று இருக்கிறார்.இங்கே நீர் ஊற்று எப்போதும் ஊறிக் கொண்டே இருக்கிறது.இதனால் தான் இந்த அம்மனுக்கு பொன்னூத்தம்மன் என்று பெயர்.










ரொம்ப குறுகலாக உள்ள இந்த குகையில் ஒருவர் பின் ஒருவராக உள்ளே நுழைந்து அம்மனை தரிசித்து விட்டு வந்தோம்.அப்புறம் முருகன், விநாயகர், ஆஞ்ச நேயர், சிவன் சன்னதி, நவகிரக சன்னதி இருக்கிறது.ஆலமரத்து பிள்ளையார் வேற இருக்கிறார்.மலைகளுக்கு இடையில் இந்த கோவில் அமைந்து இருப்பது வியப்புக்குரியது.மேலும் ஒரு பாறையின் கீழே உள்ள குகையில் சித்தர் தங்கி இருந்த இடமும் இருக்கிறது.
இரண்டு நாள் முன்பு பெய்த மழையினால் சுற்றுப்புறம் எங்கும் பசுமை நிறைந்து இருக்கிறது.நீர்கசியும் மலை முகட்டினையும் காணலாம்.இந்த கோவிலின் மலையில் இருந்து எதிர்புறம் பார்த்தால் அங்கே அனுவாவி சுப்பிரமணியர் கோவில் தெரிகிறது.இந்த பொன்னூத்தம்மன் கோவிலில் அமாவாசை அன்று சிறப்பு பூஜை நடைபெறும்.இந்த கோவில் வரை செல்ல பஸ் வசதி எதுவும் இல்லை.ஆனால் வரப்பாளையம் வர மினி பஸ் வசதி இருக்கிறது.குடும்பத்துடன் செல்பவர்கள் அம்மனுக்காக கோழி, கிடா வெட்ட அனுமதி உண்டு.அங்கேயே சமைத்து சாப்பிட்டு விட்டு வரும் வசதியும் இருக்கிறது.





இந்த கோவில் ரொம்ப தனிமையில் இருப்பதால் சமூக விரோதிகள் கூடும் இடமாக இருக்கிறது.நாங்கள் செல்லும் போது ஓர் இடத்தில் அனைவரும் மது அருந்தி கொண்டு சீட்டு விளையாடி கொண்டு இருந்தனர்.அப்புறம் யானைகள் தொல்லை அதிகமாக இருக்கும் என்றும் எச்சரிகை போர்டு  வைத்து இருந்தனர்.அப்புறம் இந்த கோவிலின் பூசாரியையும் போட்டோ எடுத்து கொண்டோம்.
இந்த  கோவிலுக்கு செல்வதினால் நிச்சயமாக ஒரு புது வித அனுபவம் ஏற்படும் என்பது உறுதி.
துடியலூரில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் இருக்கிறது
.
நேசங்களுடன்
ஜீவானந்தம் 

2 comments:

  1. அமைதியை நாடுவோர் போகலாம் போல் உள்ளது. படங்கள் அருமை.

    ReplyDelete
  2. ஆமாங்க ராஜி...இதை எழுத மறந்துட்டேன்...நன்றி

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....