Monday, July 16, 2012

மாமல்லபுரம் ஒரு பார்வை 1


மாமல்லபுரம்
பொழுதுபோகாமல் இருக்கிறதால் எங்காவது வெளிய போலாம் அப்படின்னு முடிவு பண்ணி போனது நம்ம பல்லவர்களோட ஊரான மாமல்ல புரத்துக்கு..
போற வழியிலேயே ஆரம்பிக்கிறது சிற்பக்கலையின் வெளிப்பாடுகள்.மாமல்ல புரம் வந்து விட்டதை அறிவிக்கும் விதமாக வழியெங்கும் ரோட்டின் இருபுறத்திலும் ஏகப்பட்ட சிறு சிறு சிற்ப தொழிற்சாலைகள்.
 
பல்லவ மன்னவனின் நகரமான மாமல்லபுரம் நம்மை வரவேற்கிறது.முதலில் போன இடம் ஐந்து ரதம் இருக்குமிடம்.ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், பெரிய யானை, நந்தி என நிறைய சிற்பங்களை நேரில் பார்த்த போது ஒரு வித மகிழ்ச்சி.



அப்புறம் உலக பாரம்பரிய சின்னமாக மாமல்லபுரம் இருப்பதாலும் நம்ம பல்லவர்கள் புகழ் வெளிநாடு வரை பரவி இருப்பதாலும் அயல்நாட்டவர்களின் வருகை ரொம்ப அதிகமா இருக்கு.கூடவே நம்ம ஜோடிகளும்...
ஐந்து ரத சிற்பங்களை பார்த்துவிட்டு காலாற நடக்கையில் இருபுறமும் தற்கால பல்லவர்களின் கைவண்ணத்தில் உருவான சிலைகளை கண்டோம்.இவைகள் பெரும்பாலும் சிலை வடிக்கும் கருங்கல் கல்லினாலே இருக்கிறது.பல்லவர்களின் சிற்பங்கள் அனைத்தும் பாறைகளில் இருக்கின்றன. 
(                    புத்தருக்கு போட்டியா போஸ் கொடுக்கும் பெரியவர் )



அப்புறம் முக்கியமா காதலர்களுக்கும் ( மத்தவங்களுக்கும்..?) சொர்க்க பூமியா இருக்கிற மலை பகுதிக்கு சென்றோம்.ஒரு பாறை துண்டு எந்த வித சப்போர்ட்டும் இல்லாமல் நிற்கிறது.ஆச்சர்யம்தான்.அந்த மலை முழுவதுமே பல்லவர்களின் கைவண்ணம் தான்.அப்புறம் அந்த மலை பகுதியில் நிறைய குறியீடுகள், நீர் தேக்க பள்ளங்கள் என நிறைய ஆச்சர்யங்கள்.


அதைவிட ஆச்சர்யம்...எங்கெல்லாம் பாறைகள் இருக்கோ இல்லையோ... ஆனா அம்மணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கு.செடி கொடிகளுக்குள் பாறை மறைவுகளுக்குள் புதுப்புது ரூட்டு போட்டு மறைவான பகுதிகளில் ஆளாளுக்கு தத்தம் ஜோடிகளுடன் மலை பகுதிகளில்...(அப்படி என்னதான் பேசுவாங்க ஒரு டவுட்டு....ஒரு ஜோடிய பார்த்துட்டு கூட வந்த நண்பர் சொன்னது மச்சி...அங்க பாரேன்...மைக்குல பேசறாங்க... )
அவங்களை தொந்தரவு பண்ணி பழிபாவத்துக்கு ஆளாக வேண்டாமே என்று அங்கிருந்து நகர்ந்தோம்.விடு ஜூட்...

இனி அடுத்த பதிவில்..


நேசங்களுடன்
ஜீவானந்தம்

 

11 comments:

  1. ஒரு ஜோடிய பார்த்துட்டு கூட வந்த நண்பர் சொன்னது மச்சி...அங்க பாரேன்...மைக்குல பேசறாங்க... )
    /////////////////////////////
    அவ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. நன்னி சிறப்பான பதிவு படங்கள் அற்புதம்

    சுத்துறான் சுத்துறான் ஊர் ஊரா சுத்துறான் - மாப்ள நீர் சுத்துவதால் நா சுத்த வேண்டியது இல்ல என்ன அங்கெ போனா போட்டோ எடுப்போம் அவ்வளவுதான் அதே உமது பதிவு மூலம் விளக்கமும் போட்டவும் கிடைக்குதே சோ சுத்து மாப்ள சுத்து

    ReplyDelete
  3. //பார்வை 1 //

    மாப்ள அப்ப 1, 2,,3,- பில்லா மாதிரி சரி வெய்டிங்

    ReplyDelete
  4. படங்கள் எல்லாமே செம...செம.... என்ன பாஸ் கோவையிலிருந்து மாமல்லபுரம் வந்துட்டீங்க...

    ReplyDelete
  5. படங்கள் யாவும் கொள்ளை அழகு....! ம்ம்ம்ம் மாமல்லபுரம் எக்ஸ்பிரஸ்....!

    ReplyDelete
  6. இவ்வாறன பகுதிகளின் மதிப்பு தெரியாமல் அதில் சேதம் விளைவிப்பதும், கிறுக்குவதும் என எத்தனை தேவையல்லாத செயல்களை செய்கிறோம்..

    ReplyDelete
  7. வலைப்பக்கங்களின் விஜயசாரதி(சன் டி.வி )ஆகிட்டீங்க போல

    ReplyDelete
  8. சூப்பர் அனுபவங்கள்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....