Monday, October 15, 2012

குடிமகன்களின் தேசம் -பாண்டிச்சேரி - ஒரு பார்வை

குடிமகன்களின் தேசம் -  பாண்டிச்சேரி ஒரு பார்வை...மறுபடியுமா....

எச்சரிக்கை
       மது உடலுக்கு தீங்கானது 
இந்த பதிவில் உள்ளவை அனைத்தும் எனது சொந்த அனுபவமே.யார் மனதையும் புண்படுத்துவதற்காக இல்லை.விருப்பமுள்ளவர்கள் தொடரலாம்.இல்லையேல் 
இந்த பதிவை படிப்பதை தவிர்த்து விடுங்கள்....
இது கண்டிப்பாக  குடிமகன்களுக்கு மன்னிக்கணும் நம்ம பங்காளிகளுக்கு  மட்டும்.
         
        செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு  பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.
விழுப்புரம் ரொம்ப டிராஃபிக்...மெதுவாகவே வண்டி ஊற மனசுக்குள் வேகம் எடுக்க ஆரம்பித்தது.செல்லும் வழியில் தென்பட்ட அம்மணிகளில் மனம் லயிக்க மறுத்தது.என் மனதை படித்தது போல பாய்ந்து சீறியது என் சிங்கம்.(அதாங்க நம்ம வண்டி...)
விழுப்புரத்தில் இருந்து இருபது இருபத்தஞ்சு கிலோ மீட்டருக்குள் பாண்டி பார்டர் வர ரொம்ப சந்தோசமாக இருந்தது....போலிஸ் செக் போஸ்ட் கள் பாண்டி பார்டர் வந்துவிட்டதை ஞாபக படுத்தின....புதுச்சேரி அரசின் முத்தமிழ் வாயில் நம்மை வரவேற்றது.
 
அப்படி ஒண்ணும் சுத்தி பார்க்க போறது கிடையாது.போறதே கொஞ்சம் நம்ம ஜாதிக்காரங்களை பார்க்கத்தான்.வழி நெடுக நமக்கான கடைகள் நிறைய இருக்க, ஆங்காங்கே பங்காளிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்க மனம் மிக மகிழ்ச்சி அடைந்தது...கொஞ்ச நேரத்தில்  சரியான இடத்தில் வண்டி நிற்கவே அங்கே  இருந்த ஒரு புதுச்சேரி அரசின் மதுபானக் கடை நம்மை வரவேற்றது.
கை பரபர வென துடிக்க கால் முன்னேறி செல்ல கடைக்குள் உள்ளே நுழையவும் நமக்கு முன்னே  ஏற்கனவே ஒரு கூட்டம்..ரொம்ப பேருக்கு இதுதான் வேலை போல...நம்மளை மாதிரியே....இந்த கடையை பத்தி சொல்லி யாகணும்..எவ்ளோ நீட்டா இருக்கு.கொஞ்சம் கூட குப்பை இல்லாமல் மிக நன்றாக வைத்து இருக்கின்றனர்.நம்ம டாஸ்மாக் நினைச்சா படு கேவலம்...சுகாதாரம் லாம் சுத்தம் நம்ம ஏரியாவுல....ஆனா இங்க பரவாயில்லை...
 
அங்கே இருந்த குடிமக்களில் நானும் ஒருவனாக ஆனேன்.நம்ம ஃபெவெரைட் பக்கார்டி ஆர்டர் செய்து விட்டு அப்படியே சைட் டிஷ் எல்லாம்ஆர்டர் செய்தேன்.
நமக்கு பிடித்த நெத்திலி ஃபிரை, நண்டு வறுவல், சங்கரா மீன், சுண்டல், என அனைத்தும்...
 
பாண்டியில் எப்பவும் சைட் டிஷ் மிக நன்றாக இருக்கும்.தனி கவனம் எடுத்து செய்வார்கள் போல...அவ்ளோ சுவை.
முதலில் வந்தது  நெத்தில் ஃபிரை.மிக டேஸ்ட்.மொறு மொறு வென....அருமை...அதிகமா விரும்பி சாப்பிடுவது சரக்குக்கு அப்புறமா இதுதான்...
சங்கரா மீன் ....தோசைக்கல்லில் சுட்டு கொண்டு வந்து இருந்தனர்.கொஞ்சம் கூட எண்ணை இல்லாமல் மிக சுவை உடன்.....

நண்டு....நல்ல சுவை...பொடி பொடி நண்டாய் நிறைய...ஒவ்வொன்றையும் கடித்து கடித்து இருக்கிற சாறை உறிஞ்சி  எடுத்து விட்டு  கீழே போட வெறும் ஓடு மட்டும்  ஓடியது.
அப்புறம்...ஆப்பாயில்...இதை சொல்லவே வேணாம்...அவ்ளோ பிடிக்கும்...எல்லா விலையும் ரொம்ப குறைவு தான்.சரக்கு விலையும் கம்மி தான்.அப்புறம் ஒரு ரெண்டு மணி நேரம் இந்த தேசத்தில் குடிமகனாய்  இருந்து விட்டு கிளம்பினேன்.
 
கிளம்பும் போது மனசுக்குள் ஒரு சின்ன தடுமாற்றம்...நாம பெட்ரோல் போட்டுகிட்டோம். நம்ம வண்டிக்கும் எதாவது கருணை காட்டணுமே அப்படின்னு  பக்கத்துல இருந்த பங்க்ல வண்டிக்கு டீசல்  ஃபில் பண்ண சொன்னேன்.பார்த்தா டீசல் விலையும் குறைவுதான்.48.06 பைசாதான். பரவாயில்லையே...எல்லாம் கம்மியா இருக்கே அப்படின்னு ரொம்ப சந்தோசத்துடன் கோவை திரும்பினேன்...கூட அடுத்த நாளுக்கு உண்டான சங்கதிகளுடன்...

 குடிமகன்களின்
தேசத்தில்
நானும்
ஒரு
அரசனாகவே
இருக்க விரும்புகிறேன்.

இதுக்கு முன்னாடி போன அனுபவம் குடிமகன்களின் தேசம்

கிசு கிசு : மது உடலுக்கு தீது. ம்கூம்..இப்படி எல்லாம் சென்சார் போட வேண்டி இருக்கு..அப்புறம் இதை படித்து விட்டு உங்கள் கை அரித்தால் கம்பெனி பொறுப்பாகாது....

நேசங்களுடன்
ஜீவானந்தம்

27 comments:

  1. எப்பவாவது வெளியூர் போனா மட்டும்,..(முக்காவாசி வெளியூர்ல தான் இருப்பேன்..ஹி.ஹி.ஹி,.)

    ReplyDelete
  2. அடுத்த தடவை போறப்ப சொல்லுங்க, நானும் வாறேன்.

    ReplyDelete
  3. //இது கண்டிப்பாக குடிமகன்களுக்கு மட்டும்.//

    நல்லா கிளப்புரீறு பீதியை..... இப்படியெல்லாம் போட்டு பதிவு போடுற நிலைமை...மாப்ள இதுக்கு ஒரு முடிவு கட்டனும்

    ReplyDelete
  4. பழனி.கந்தசாமி /// சார் கண்டிப்பா ...செலவு மட்டும் உங்களது...ஹி ஹி ஹி

    ReplyDelete
  5. முத்தரசு///
    வணக்கம் கவிஞரே...
    என்ன
    முடியல...
    நம்ம
    பங்காளிகள்
    மட்டும்
    மாத்திட்டேன்..
    இது
    உங்க ஸ்டைல் ல
    இருக்கா...

    நவீன காள மேக புலவரே ....

    ReplyDelete
  6. \\செங்கல் பட்டு போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது விழுப்புரம் வந்தவுடன் வண்டி கொஞ்சம் தள்ளாட ஆரம்பித்தது.சரி ஏதோ சமிக்ஙை செய்யுது அப்படின்னு பார்த்தா வண்டி பாண்டிச்சேரி போற ரோட்டுக்கு பக்கத்துல நிக்குது..சரி வந்தது... வந்தோம்....பார்த்துட்டே போவோம் பாண்டியை அப்படின்னு கிளம்பினேன்.\\

    தம்பி விலுபுரதுக்கு முன்னாடி திண்டிவனத்தில இருந்தே பாண்டிக்கு ரூட் இருக்கே? எதுக்கு விழுப்புரம் வரைக்கும் போகணும் நே....

    ஹேமந்த்..

    ReplyDelete
  7. ஆங்

    அப்படியே

    நன்னி

    இவண்

    நவீன
    காள
    மேக
    புலவர்

    ReplyDelete
  8. ஹேமந்த்////
    ரொம்ப சுவாரசியமா பேசிட்டு வந்துட்டே இருந்தோம்...அப்புறம் தான் விழுப்புரம் வழியா போனோம்

    ReplyDelete
  9. நவீன காள மேக புலவரே..

    நன்றாக
    இருக்கு

    ReplyDelete
  10. நான் பாண்டிச்சேரி போனப்ப, மனக்குலவிநாயகர் கோவில்,சிவன்கோவில், அரவிந்த் ஆசிரமம், பீச்னு இந்த இடங்கள்தான் கண்ல பட்டுச்சு......

    இந்தப் பயபுள்ளைக்கி....பார்களா கண்ல பட்டிருக்கு. சங்கவி மச்சி கூட சேராதே...சேராதேனு சொன்னா கேட்டாத்தானே.....

    சரக்கு& கலர்ஃபுல் சைடிஷ்னு படங்கள் கண்ணைப் பறிக்கு.....:-))))

    ReplyDelete
  11. ஐய்யய்யோ இது குடிகாரப்பசங்க ஏரியா தெரியாம உள்ள வந்துட்டேன் சாமி....

    துவக்கம் -
    கசப்பு-!
    தொடர்ந்தால்-
    ஒரு வித-
    மிதப்பு!

    போதை-
    தலைக்கேறும் -
    பாதை -
    தடம் மாறும்!

    சொர்க்கமே -
    மது என்பாய்!

    உன்னை -
    கேவலமாக பார்க்கும் -
    உன் வீட்டு நாய்!

    கவலையானாலும் -
    குடி!
    கல்யாணம் ஆனாலும் -
    குடி!
    கருமாதியானாலும் -
    குடி!

    மொத்தத்தில் குடி மகனே குடி..........

    ReplyDelete
  12. மச்சி..போனவாரம் தானே அடிச்சோம்..அம்னிஷியாவா உனக்கு

    ReplyDelete
  13. நாங்கெல்லாம் பாண்டிச்சேரிக்கு உள்ளே போய்..நாலு மணி நேரம் இருந்திட்டு..சுத்தபத்தமா வெளியேறுனோம்..காரணம் வூட்டம்மா..கூடவே வந்தாங்க! ஈசிஆர் ரோட்ல காலாபட்டு தாண்டி நம்ம ஆளுங்க நிறுத்தி செக் பண்ணனும்னாங்க..வந்ததே கோபம்! செக் பண்ணிட்டு ஸாரி சொல்லி வழி அனுப்பி வெச்சாரு.பெரிய ஆளு! சரமாரியா டோஸ் விட்டேன்.. நம்ம எரிச்சல் நமக்குதானே தெரியும்!

    ReplyDelete
  14. // சங்கவி said...
    ஐய்யய்யோ இது குடிகாரப்பசங்க ஏரியா தெரியாம உள்ள வந்துட்டேன் சாமி.... //

    இது ஒலக நடிப்புடா சாமீ.........:-))

    ReplyDelete
  15. இங்க வந்துட்டு சொல்லவே இல்ல

    ReplyDelete
  16. என் ஊரோட மவுசே தனிதான்...
    பாண்டிச்சேரி... பாண்டிச்சேரின்னு படிக்கும் பொழுதே காதுல தேன்பாயுது.

    ReplyDelete
  17. // சங்கவி said...
    ஐய்யய்யோ இது குடிகாரப்பசங்க ஏரியா தெரியாம உள்ள வந்துட்டேன் சாமி.... //

    இது ஒலக நடிப்புடா சாமீ.........:-)) ///

    ஆமாம் ஜெய்..ஆஸ்கார் விருதுதான் தரனும்...

    ReplyDelete
  18. அருணா செல்வம் said...////

    என் ஊரோட மவுசே தனிதான்...
    பாண்டிச்சேரி... பாண்டிச்சேரின்னு படிக்கும் பொழுதே காதுல தேன்பாயுது.///

    நமக்கு தேன் பாயல...வேற எதுவோ....

    ReplyDelete
  19. கோகுல் said...///
    இங்க வந்துட்டு சொல்லவே இல்ல///

    சொல்லி இருப்பேன்..சொன்னா உங்க வீட்டுக்காரம்மா உங்களை விடுவாங்களா...?அடி பின்னிட மாட்டாங்க

    ReplyDelete
  20. ரமேஷ் வெங்கடபதி said...
    நம்ம எரிச்சல் நமக்குதானே தெரியும்!///

    பாவம் சார் நீங்க....ரொம்ப கஷ்ட பட்டு இருக்கீங்க

    ReplyDelete
  21. அரிய பல நல்ல(!!!!) விஷயங்களை கொடுத்ததற்கு நன்றி....தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  22. அகிலா said...

    அரிய பல நல்ல(!!!!) விஷயங்களை கொடுத்ததற்கு நன்றி....தொடரட்டும் உங்கள் பணி....///

    ஏதோ...நம்மால் முடிஞ்ச உதவி...

    ReplyDelete
  23. மச்சி சைட்டு டிஸ் சூப்பர்.. எச்சில் ஊறுகிறது. (நவராத்திரியும் அதுவுமா..அபிஷ்ட்டு)

    ReplyDelete
  24. குடி குடியை கெடுக்கும்..வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை..

    ReplyDelete
  25. Were you drunk while driving back home?

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....