Sunday, April 1, 2012

பப்பர மிட்டாய்.....பாம்பே மிட்டாய் ...ஜவ்வு மிட்டாய்


நான் ஆழியாறு குரங்கு அருவி - மங்கி பால்ஸ் செல்லும் போது இந்த பப்பர மிட்டாய் வாங்கி என் சிறுவயது ஞாபகங்களை கிளறி கொண்டேன்...

எங்காவது கோவில் திருவிழாவோ இல்ல பண்டிகையோ நடக்கும் போது இந்த பப்பர மிட்டாய் என்கிற பாம்பே மிட்டாய் பார்க்கலாம். அப்புறம் வீதி வீதியா ஒரு காலத்துல கொண்டு வந்து வித்துட்டு இருந்தாங்க.ஒரு நீண்ட கழியில் ஒரு பொம்மையை வச்சிக்கிட்டு அதன் இரு கையில் ஜிங்குசா வச்சி இருப்பாங்க ரெண்டு கையும் தட்டுனா சத்தம் வர்ற மாதிரி வச்சிக்கிட்டு கூவிகிட்டு இருப்பாங்க. நல்ல ரோஸ் நிறத்தில் கொஞ்சம் வெள்ளை நிறத்துடன் (இன்னும் நிறைய கலர் இருக்கும்) ஜவ்வு மிட்டாயை பாலிதீன் பேப்பர்ல சுத்தி அந்த கழியில் வச்சி என்ன உருவம் வேணுமோ அதை பண்ணி தருவாங்க...வாட்சு, மோதிரம், மயில், வண்டி இப்படி நிறைய... இதை இப்போ பார்க்கும் போது சிறு வயசில் இதை வாங்கி சாப்பிட்ட அனுபவம் கண்ணுக்கு தெரியுது.



வாட்சு கேட்டால் அதை அழகாய் செஞ்சு கையில் கட்டி விடுவாங்க.. அதை அப்பப்ப நேரம் பார்த்துகிட்டே கொஞ்சம் கொஞ்சமாய் இழுத்து இழுத்து சாப்பிட்டு காலி பண்றது இருக்கே அது.... ஒரு சுவை மிகுந்த அனுபவம்....அப்புறம் அவங்க குடுக்கிற ஜவ்வு மிட்டாயை நம்மளும் என்ன என்ன பண்ண முடியுமோ பண்ணி அதை கொலையா கொன்னு எடுக்கிறது ஒரு சுகம்....அப்புறம் அதை எவ்ளோ தூரம் இழுக்க முடியுமோ இழுத்து அதை வாயை அண்ணாந்து பொளந்து கிட்டு கொஞ்சம் கொஞ்சமாய் உள்ளே தள்ளுறது இருக்கே அது ஒரு சுகம்....நல்லா சவுக் சவுக்னு மென்னு தின்கிறதால் வாய்க்கு  கூட நல்ல எக்ஸ்சசைஸ் ஆக இருக்கும். (இதை பார்த்து தான் ஒருவேளை பபிள் கம் தயாரிச்சு இருப்பாங்களோ இல்லை பபிள் கம் பார்த்து நம்மாளுங்க இதை  தயாரிச்சு இருப்பாங்களோ).

இப்போலோம் இது ரொம்ப குறைந்துவிட்டது. யாரும் வாங்கி சாப்பிடுவது இல்லை.(ரொம்ப ஹைஜீனிக்கா இருக்காதுன்னு நினைச்சு இருப்பாங்களோ).அப்போ இருந்த விலை வாசியில இதெல்லாம் குடிசைத்தொழிலா இருந்து குழந்தைகளின் ரொம்ப விருப்பமா இருந்துச்சு. காலமாற்றத்தின் காரணமாக சாக்லேட், ஐஸ்கிரீம் இது போன்ற வஸ்துகள் நிறைய வந்ததினால் இதெல்லாம் மறைந்து விட்டது.இந்த மாதிரி குடிசை தொழில்கள் நிறைய அழிந்து விட்டன..

இப்போ ஒரு சில நகரங்களில் பிறந்தநாள், கல்யாண விழாக்களில் இதனை ஏற்பாடு செய்து தருகிறார்கள்.


 
நான் டூவீலர் வண்டியும் (ஆர்சி புக் நம்பர்லாம் கேட்க கூடாது) நம்ம தேசிய பறவை மயிலும் வாங்கினேன். பிளாஸ்டிக் உறையில் போட்டு தான் தர்றாங்க. (விலை ஒவ்வொன்றும் பத்து ரூபாய்... விலைவாசி ஏறிடுச்சுன்னு நினைக்கிறேன்.சின்ன வயசில எட்டணா ஒரு ரூபாய்க்கு வாங்கினது).என் பொண்ணு ரொம்ப விரும்பி சாப்பிட்டா...என்னோட மலரும் நினைவுகளை கிளறின இந்த பப்பர மிட்டாய்க்கு தற்போதைய விலை ஒன்றும் அதிகமாக தெரியவில்லை..


கிசுகிசு:
ஒரு சில மாசம் முன்பு நம்ம நண்பர் இந்த மிட்டாய் பத்தி போடுங்க அப்படின்னு ஒருத்தர் கேட்டார் (நம்மையும் படிக்க சில பேர் இருக்காங்கப்பா.... ரொம்ப பெருமையா இருக்குங்க) எப்படியோ அவரோட ஆசைய நிறைவேத்திவிட்டேன்.....

இனிய சுவையுடன்
ஜீவானந்தம்

8 comments:

  1. http://www.lekhafoods.com/

    ReplyDelete
  2. எங்க ஊருல இதை ஜவ்வு மிட்டாய்ன்னு சொல்வாங்க. தலைமுடி, நூல் சிக்கு குடுதா இதை குடுப்பங்க. காசுக்கும் குடுப்பாங்க. தேள், பாபம்பு, வாட்ச்ன்னு செஞ்சு கைல, கன்னத்துல ஒட்டிக்கிட்டு சாப்பிட்டது இன்னமும் நினைவிருக்கு.

    ReplyDelete
  3. நன்றி ராஜி..உங்க மலரும் நினைவுகளை பகிர்ந்து கிட்டதுக்கு

    ReplyDelete
  4. ம்......பழைய நினைவுகள் ஞாபகப்படுத்தி விட்டீர்கள்

    ReplyDelete
  5. ரொம்ப நன்றி மனசாட்சி...

    ReplyDelete
  6. பழைய பள்ளிகூட ஞாபகங்களை நினைவுபடுத்துனதற்கு நன்றி ஜீவா கேமரா இல்லைனா உங்களை பார்க்கமுடியாது போலிருக்கு

    ReplyDelete
  7. உங்கள் பம்பரமிட்டாய் பதிவு அருமை.

    அப்போதே அந்த மிட்டாயை வாங்க பெரியவர்கள் அனுமதிப்பது இல்லை.
    இந்த கால பெற்றோர்கள் எப்படி அனுமதிப்பார்கள்.

    டூவீலர், வண்டி அழகு. மயில் எங்கே?

    ReplyDelete
  8. மயில் பறந்திடும்னு என் பொண்ணு சாப்பிட்டு விட்டாள்..ஹி ஹி ஹி ..நன்றி கோமதி அரசு...

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....