Friday, June 29, 2012

ஸ்ரீ பகவதி என்கிற மலையம்மன் கோவில் - தியாகதுருகம்

ஸ்ரீ பகவதி என்கிற மலையம்மன் கோவில்

கள்ளக்குறிச்சி தாண்டி உளுந்தூர்பேட்டை செல்லும் பைபாஸ் ரோட்டிற்கு அருகில் இந்த மலை குன்று இருக்கிறது.அநேகமாக தியாகதுருகம் என்கிற ஊர் ஆகத்தான் இருக்கும்.பெரிய பெரிய உருவத்தில் எங்கும் பாறைகள் உருண்டை உருண்டையாய்... தட்டை தட்டையாய் பல்வேறு வடிவங்களில் ...குகைகள் போன்று வேறு இருக்கிறது.இந்த குன்றிலும் ஒரு கோவில் இருக்கிறது.சென்னை போயிட்டு இருக்கும் போது எதேச்சையாய் கண்ணில் தென்பட்டதால் உள்ளே ஒரு விசிட்  விட்டேன்.









அமைதியாகத்தான் இருக்கிறது.மலை என்பதினால் என்னவோ வரவேற்பது நம்ம முன்னோர்கள் தான். உள்ளே நுழைந்தவுடன்  இடதுபுறம் பாறைக்குகையில் ஒரு தெய்வம். வலது புறம் ஒரு குதிரை சிலை.மேலே செல்ல கருங்கல் படிகள்...பார்க்க கொஞ்ச தூரமே இருந்தாலும் நடக்கும் போது செமையான கால் வலி.மேலே சென்று பார்க்கும் போது ஒரு பாறையில் தண்ணீர் தங்குவதற்காக குழி செதுக்கி  இருக்கிறார்கள்.இந்த தண்ணீர் அங்கு உள்ள நம் முன்னோர்களின் (குரங்கார்கள்) தாகத்தை தீர்க்க கூடியதாக இருக்கிறது.பாறைகளுக்கு இடையில் மரங்கள் நிறைய பசுமையாக இருக்கிறது.பாறைகளின் மேற்பகுதியில்  ஒரு புளியமரம் ஒன்று இருக்கிறது.இந்த மரத்திற்கு எதிரில் உள்ள குகையில் இந்த அம்மன் இருக்கிறாள். விநாயகர் சன்னதி ஒன்றும் மேலே இருக்கிறது.கஷ்டப்பட்டு மேலேறி வந்ததுக்கு ஒரு கும்பிடுவையும் போட்டுவிட்டு கீழே இறங்கினோம்.

முக்கிய  விசேச தினங்களில் இங்கு பூஜை நடைபெறும் என்று அங்கு ஒரு வெளங்காதவன்...அதுதாங்க...மாடு மேய்க்கிறவர் சொன்னார்.
இந்த மலையை சுற்றிலும் பாறைகள் மரங்கள் மட்டுமே இருக்கின்றன.சமூக விரோதிகளின் கூடாரமாக இது இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.ஒளிந்து கொள்வதற்கு ஏற்ற வகையில் குகைகள் இருக்கின்றன.திப்பு சுல்தான் காலத்து பீரங்கி கள் இருகின்றனவாம்.இப்போது தொல் பொருள் துறையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதாம்.
காதலர்க்கும் மத்தவங்களுக்கும் ரொம்ப ஏத்த இடம் போல இருக்கு.ஆனா சூதானமா நடந்துக்கணும்.ஏன்னா சமூக விரோதிகளின் பொல்லாப்புக்கு ஆளாயிடுவோம்...பீ கேர்புல்........


நேசங்களுடன்
ஜீவானந்தம்  

5 comments:

  1. வணக்கம்

    அட.. அங்கேயும் ஒரு வெளங்காதவனா...

    ReplyDelete
  2. கேமராவும் கையுமாவே சுத்தற போல மச்சி

    ReplyDelete
  3. படமும் தளமும் அருமை ..........

    ReplyDelete
  4. படங்களும் பயண அனுபவமும் அருமை!

    ReplyDelete
  5. டாப்பு தலைவா! படத்தையும் பதிவையும் சொன்னேன்!

    ReplyDelete

வாங்க...வாங்க....ஏதாவது சொல்லிட்டு போங்க....